Fake Check: கோயிலுக்கு வந்த கண்ணகி அம்மன்! வியப்பில் பக்கதர்கள்
வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயதின் அருகில் சென்ற அடையாளம் தெரியாத இரண்டு பெண்களிடம் இருந்து ஒளி வீசியதாக சமூக வலைத்தளங்களில் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
அண்மையில் இடம்பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய பூஜையின்போது, இரண்டு பெண்கள் ஆலயத்தை நோக்கி செல்வதையும் அவ்வாறு அவர்கள் செல்லும்போது வித்தியாசமான வெளிச்சம் ஏற்பட்டதாகவும் திடீரென மறைந்து விட்டதாகவும் சமூகவலைத்தளத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருவதுடன், பலராலும் பகிரப்பட்டு வருகின்றது.
அவ்வாறு சென்றவர்கள் கண்ணகி அம்மன் என்றும் செய்திகள் பரவி வருகின்றது.
குறித்த செய்தியை பார்த்த பலரும் விமர்சித்து வருகின்றனர்.
இந்த சம்பவம் பொய் எனவும், வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயம் மிகவும் சிறப்பு வாய்ந்த ஆலயம். ஆகவே இப்படியான வதந்திகளைப் பரப்பி ஆலயத்தின் பெயரைக் கெடுக்க வேண்டாம் எனக் குறிப்பிட்டு வருகின்றனர்.
உண்மைக்கு புறம்பான செய்தி
மேலும், ஒரு நாடக குழுவினர் நாடகத்திற்காக ஆயத்தம் செய்திருக்கலாம் அல்லது பழைமை வாய்ந்த ஆலயங்களில் இவ்வாறு வேடமணிந்து ஆலய வழிபாட்டில் ஈடுபட்டிருக்கலாம், அல்லது ஏதாவது குறி சொல்லும் பெண்களாகவும் இருக்கலாம் எனவும் சிலர் கூறுகின்றனர்.
இவ்வாறான வழிபாடு மட்டக்களப்பிலுள்ள ஆலயங்களில் நடைபெற்று வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆகவே, அவ்வாறான ஒரு காட்சிகளை எடுத்து உண்மைக்கு புறம்பான செய்திகளை பரப்பி வருவதாகவும் இதனை யாரும் நம்ப வேண்டாம் எனவும் கூறி வருகின்றனர்.
இருப்பினும் இந்த செய்தி தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் இது Fake Check எனவும் சில செய்திகள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

குட் பேட் அக்லி, தக் லைஃப் படத்தின் மொத்த வசூலை ஒரே நாளில் தாண்டிய குபேரா.. பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam
