வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் விழா - முன்னாயத்த கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்றுச் சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த வைகாசிப் பொங்கல் விழா எதிர்வரும் 09.06.2025 திங்கள் அன்று நடைபெறவுள்ளது.
இவ்விழா தொடர்பிலான ஒழுங்கமைப்பு முன்னாயத்த கலந்துரையாடல்(30-05-2025) இன்றைய தினம் பிற்பகல் 3 மணிக்கு மாவட்ட அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது.
ஏற்கனவே நடைபெற்ற முன்னாயத்த கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக பொங்கல் விழாவிற்கு வருகைதரும் பக்தர்களிற்கான அடிப்படை வசதிகள் பாதுகாப்பு போன்ற விடயங்கள் உட்பட பல்வேறு விடயங்கள் தொடர்பில் இன்று விரிவாக ஆராயப்பட்டது.
குறித்த கலந்துரையாடலில் மாவட்ட உதவி அரசாங்க அதிபர் கரைதுறைப்பற்று பிரதேச உதவிப் செயலாளர் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ அலகின் உதவிப் பணிப்பாளர் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் பொலிசார் கடற்படையினர் விமானப்படையினர் இரானுவத்தினர் சுகாதார பரிசோதகர்கள் உட்பட உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிர்வாக சபை உறுப்பினர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.