வருமான வரித் திணைக்களத்திற்கு நிதி அமைச்சு வழங்கியுள்ள இலக்கு : அதிகரிக்கும் வரி செலுத்துவோரின் எண்ணிக்கை
தற்போது காணப்படும் 05 இலட்சத்து 196 தனியார் வரிக் கோவை எண்ணிக்கையை 01 மில்லியனாக அதிகரிக்கும் இலக்கை தேசிய வருமான வரி திணைக்களத்துக்கு நிதி அமைச்சு வழங்கியுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
அதிகரிக்கும் எண்ணிக்கை
இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,
வருமானவரி வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்டுள்ள வரிக்கோவை எண்ணிக்கையை அதிகரிப்பதன் மூலம், வரி செலுத்துவோரின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
உரிய முறையில் வரியை செலுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதன் மூலம் வரிச்சுமை குறைவடையும் அதேவேளை, வரி அடிப்படையை விரிவுபடுத்த முடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
2019ஆம் ஆண்டு 17 இலட்சமாக தனியார் வருமான வரி கோவைகள் இருந்துள்ளது. இது 2021ஆம் ஆண்டு 05 இலட்சத்து 70 ஆயிரமாகக் குறைந்துள்ளது.
அதேவேளை 2022 ஆம் ஆண்டு 02 இலட்சத்து 04 ஆயிரத்து 467 ஆக இது குறைவடைந்துள்ளது. எனினும் 2023ஆம் ஆண்டு மீண்டும் அது 05 இலட்சம் வரிக்கோவையாக அதிகரித்துள்ளது.
அதற்கிணங்க இந்த வருடத்தில் அந்த வரிக்கோவை எண்ணிக்கையை 10 இலட்சமாக அதிகரிப்பதற்கு புதிய தேசிய வருமானவரி ஆணையாளர் சேபாலிகா சந்திரசேக்கர தலைமையிலான வருமானவரி திணைக்களத்தின் அதிகாரிகளுக்கு, பாரிய இலக்கு வழங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
நல்லூர் கந்தசுவாமி கோவில் 1ம் நாள் - மாலை திருவிழா





இந்தியக் கடற்படைக்கு ரூ.1 இலட்சம் கோடி மதிப்பில் 9 அதிநவீன நீர்மூழ்கி கப்பல்கள்., CCS ஒப்புதல் விரைவில் News Lankasri

திருமண மண்டபத்தில் ஆனந்தி கர்ப்பமாக இருக்கும் விஷயம் வெளிவந்தது.. ஷாக்கில் குடும்பம், சிங்கப்பெண்ணே புரொமோ Cineulagam

தந்திரமாக வேலை செய்து காய் நகர்த்திய குணசேகரன், சந்தோஷத்தில் அறிவுக்கரசி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
