பிரதமரின் கூட்டத்தை பகிஷ்கரித்த வாசு, விமல், உதய
பிரதமர் மகிந்த ராஜபக்ச தலைமையில் இன்று முற்பகல் நடைபெற்ற ஆளும் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டத்தில் அமைச்சர்கள் வாசுதேவ நாணயக்கார, விமல் வீரவங்ச மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் கலந்துக்கொள்ளவில்லை.
இந்த கூட்டத்திற்கு கட்சித் தலைவர்கள் அல்லாதவர்களும் அழைக்கப்பட்டுள்ளதாக இந்த அமைச்சர்கள் பிரதமரிடம் கூறியுள்ளனர்.
அவசியமற்ற நிலைமையை ஏற்பட்டு, பிரதமருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்த விரும்பில்லை என்பதால் இந்த பேச்சுவார்த்தையில் கலந்துக்கொள்ளவில்லை என இந்த அமைச்சர்கள் பிரதமருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து வேறு ஒரு தினத்தில் மற்றுமொரு கூட்டத்தை கூட்டுவதாக பிரதமர், இந்த அமைச்சர்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார்.