ஹரிணிக்கு எதிராக திரும்பிய வசந்த! சர்ச்சையை கிளப்பும் முஜிபுர்
வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க முற்றுமுழுதாக அரசாங்கத்துக்கும், பிரதமருக்கும் எதிராக செயற்பட்டுள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுபினர் முஜிபுர் ரஹ்மான் (Mujibur Rahman) தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,
''எதிர் தரப்பினர் எங்கு பிளவுப்பட்டுள்ளனர். அவ்வாறு ஒன்றும் இல்லை. அரசாங்கமே இன்று பிளவுப்பட்டுள்ளது.
வசந்த சமரசிங்க
பிரதமர் தவறுதலாக ரோஹித ராஜபக்ச தொடர்பான விடயங்களை கூறியிருப்பார் என நினைக்கின்றேன்.
மக்கள் விடுதலை முன்னணிக்கும் தேசிய மக்கள் சக்திக்கும் இடையே பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
தற்போது அது வெளிப்படுகிறது. நாடாளுமன்றில் அரசாங்கத்தின் தலைவராக பிரதமரே செயற்படுவார்.
பிரதமர் ஒரு கருத்தை தெரிவித்தால் அதை சரிசெய்ய அமைச்சருக்கு முடியாது.
வசந்த சமரசிங்க முற்றுமுழுதாக பிரதமருக்கு எதிராக செயற்பட்டுள்ளார்” என தெரிவித்துள்ளார்.




