கண்டறியப்படாத தொற்றுகள் மூலம் மாறுபாடுகள் பரவக்கூடும்!விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
மேல் மாகாணத்தின் "மாதிவலை"யில் கோவிட் வைரஸின் "டெல்டா" மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள ஒருவர் கண்டறியப்பட்டுள்ளார்.
53 வயதான பாதிக்கப்பட்ட பெண் இப்போது தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
"டெல்டா" மாறுபாடு மாதிவலையில் பரவி வருவதாக சந்தேகம் ஏற்பட்ட நிலையில், அங்கு எழுந்தமான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது இந்த பெண் டெல்டா தொற்றுடன் கண்டறியப்பட்டுள்ளார்.
டெல்டா மாறுபாடு முதன்முதலில் கொழும்பு தெமட்டகொட பகுதியில் கண்டறியப்பட்டது. இந்த நிலையில் கோவிட் வைரஸின் டெல்டா மாறுபாடு ஏற்கனவே நாடு முழுவதும் பரவியிருக்கலாம் என்று சுகாதார ஆய்வாளர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
சமூகத்திற்குள் மாறுபாட்டில் கண்டறியப்படாத தொற்றுகள் இருக்கலாம் என்று பொது சுகாதார ஆய்வாளர்கள் சங்க செயலாளர் எம்.பாலசூரிய தெரிவித்திருந்தார்.
இலங்கை முழுவதும் பயணத்தடை விதிக்கப்பட்டிருந்தாலும், பலர் நாட்டில் சுற்றி வருவது கண்டறியப்பட்டுள்ளது. இதுவே ஒருவரிடம் இருந்து இன்னொருவருக்கு டெல்டா தொற்று பரவுவதற்கான வாய்ப்பை உருவாக்கியிருக்கலாம்.
இதேவேளை, நாடு முழுவதும் பயணத்தடையை நீக்குவதன் மூலம், பொதுமக்கள் பொது
மற்றும் தனியார் போக்குவரத்து இரண்டிலும் பயணத்தைத் தொடங்குவார்கள், இதன்போது
கண்டறியப்படாத தொற்றுகள் மூலம் மாறுபாடுகளும் பரவக்கூடும் என்று அவர்
எச்சரித்துள்ளார்.