நானுஓயாவில் விபத்து! ஒருவர் படுகாயம்
நானுஓயா- பங்கலாவத்த பகுதியில் வான் - மோட்டார் சைக்கிள் மோதி விபத்து சம்பவித்துள்ளது.
குறித்த விபத்து இன்று (19) பிற்பகல் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திச்சென்ற நபர் படுகாயமடைந்த நிலையில் 1990 அவசர நோயாளர் காவு வண்டி மூலம் ஆரம்ப சிகிச்சை வழங்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விசாரணை
இந்த விபத்து சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், தலவாக்கலை பகுதியிலிருந்து நுவரெலியா நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் நுவரெலியாவிலிருந்து நானுஓயா நோக்கி பயணித்த வானும் எதிர் எதிரே நானுஓயா பங்கலாவத்த பகுதியில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.

இதனையடுத்து ,வானின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும், விபத்து சம்பவம் தொடர்பாக நானுஓயா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இராணுவத்திற்கு என 1.5 டிரில்லியன் டொலர் ஒதுக்க திட்டமிடும் ட்ரம்ப்: கடும் அபாய நிலையிலா அமெரிக்கா? News Lankasri
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam