வற் வரியால் பாதிக்கப்பட்டுள்ள மகிந்த
வற் வரி அதிகரிப்பு மக்களுக்கும் தனக்கும் சிரமமானது என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
களுத்துறை கூட்டுறவு கட்டிடத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டதன் பின்னர் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் மக்கள் படும் சிரமங்கள் குறித்து தற்போதைய ஜனாதிபதிக்கு தெரியப்படுத்தப்படும் என அவர் கூறியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தல்
பொதுஜன பெரமுனவினால் எதிர்வரும் தேர்தல்களுக்கு சிறந்த முறையில் முகங்கொடுக்க முடியும். சவால்கள் ஒரு பிரச்சனையல்ல.

ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறக்கூடிய வேட்பாளர் முன்வைக்கப்படுவார்.
ஐக்கிய தேசியக் கட்சி எப்பொழுதும் வாய்பேச்சுக்களை மட்டுமே மேற்கொண்டால் அது பலிக்காது என மகிந்த மேலும் தெரிவித்துள்ளார்.
You may like this
லண்டனில் 36வது மாடியிலிருந்து விழுந்து உயிரிழந்த இந்திய குடும்பம்., சம்பவம் குறித்து வெளியான தகவல் News Lankasri
இயக்குநர் இமயம் சரிந்தது.. உடல்நலக்குறைவால் காலமானார் இயக்குநர் பாரதிராஜா.. அதிர்ச்சியில் திரையுலகம் Cineulagam