பெறுமதி வாய்ந்த முதிரை குத்திகள் மீட்பு(Video)
முறிகண்டியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரிப்பர் வாகனத்தில் இருந்து பெறுமதி வாய்ந்த முதிரை குத்திகள் பளை பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
ரிப்பர் வாகனம் ஒன்றில் சூட்சுமமாக மறைத்து எடுத்து செல்லப்பட்ட முதிரை குத்திகளே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன.
ரிப்பர் வாகனத்தில் முதிரை குத்திகள் கடத்தப்படுவதாக பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை
குறித்த தகவலிற்கமைவாக பளை நகரில் சோதனை மேற்கொண்ட பொலிஸார் ரிப்பர் வாகனத்திலிருந்து முதிரை குத்திகளை மீட்டதுடன் வாகனத்தையும், சாரதியையும் கைது செய்துள்ளனர்.
மீட்கப்பட்ட 28 முதிரை குத்திகளும் சுமார் 5 லட்சம் பெறுமதியானது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் நிறைவுற்றதும் கிளிநொச்சி நீதிமன்றில் வழக்கு தொடரப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

இஸ்ரேல் முற்றாக அழிக்கப்பட்டிருக்கும், அமெரிக்காவால் தப்பியது: ஈரானின் உயர் தலைவரின் பதிவு News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்த பெண்களிடம் சகவாசம் வச்சிக்காதீங்க- நீங்க பிறந்த தேதி என்ன? Manithan
