யாழ். வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பம்(Photos)
வரலாற்று பிரசித்தி பெற்ற யாழ்ப்பாணம் - வடமராட்சி வல்லிபுரம் ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவம் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியுள்ளது.
யாழ்ப்பாணம் - வடமராட்சி, வல்லிபுரம் ஆழ்வார் கோயிலின் வருடாந்த மகோற்சவமானது இன்று(14.09.2023) கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
இந்நிலையில் விசேட பூஜை வழிபாடுகளை தொடர்ந்து காலை 08. 45 மணியளவில் கொடியேற்றம் இடம்பெற்றுள்ளது.
திருவிழாக்கள்
கொடியேற்றத்துடன் தொடர்ந்து 16 நாட்கள் இடம் பெறவுள்ள உற்சவத்தில் எதிர்வரும் 22 ஆம் திகதி வெள்ளிக்கிழமை வெண்ணைத் திருவிழாவும், 23ஆம் திகதி சனிக்கிழமை துகில் திருவிழாவும், 24ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பாம்பு திருவிழாவும், 25ஆம் திகதி திங்கட்கிழமை கம்சன் போர் திருவிழாவும் நடைபெறவுள்ளது.
மேலும் 26 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வேட்டைத் திருவிழாவும், 27ஆம் திகதி புதன்கிழமை சப்பறத் திருவிழாவும், 28ஆம் திகதி வியாழக்கிழமை தேர்த்திருவிழாவும், 29ஆம் திகதி வெள்ளிக்கிழமை சமுத்திரத் தீர்த்த திருவிழாவும், 30ஆம் திகதி சனிக்கிழமை கேணித்தீர்த்தமும் இடம்பெற்ற உள்ளது.
அதேவேளை கேணித்தீர்த்தினை அடுத்து அன்று மாலை கொடியிறக்கத்துடன் திருவிழா நிறைவடையவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |














எங்கே எப்போது உலகப் போர் தொடங்கும்... விளாடிமிர் புடின் விரும்பும் நாளேடு வெளியிட்ட தகவல் News Lankasri
