வடமுனை - வெலிக்கந்தை வீதியை மறித்து மக்கள் போராட்டம்(Video)
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை,வடமுனை மக்கள் வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊத்துச்சேனை பகுதியில் காடுகளை அழித்து முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊத்துச்சேனை வடமுனை கிராம பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சட்டவிரோத மணல் அகழ்வினால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மண் அகழ்வு காரணமாக அன்றாடம் பயன்படுத்தும் வீதி போக்குவரத்து செய்ய முடியாமலிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு பகுதிகளிலும் லொறிகளில் தினமும் பெருமளவான மண் சட்ட விரோதமான முறையில்
அகழப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.






நாங்கள் உயிருடன் இருக்கிறோம்... காஷ்மீர் தாக்குதலில் கொல்லப்பட்ட கடற்படை அதிகாரி வீடியோவின் உண்மை நிலை News Lankasri

தலைநகரில் இருந்து 600,000 மக்களை வெளியேற்றும் நேட்டோ உறுப்பு நாடு... புடினின் அடுத்த இலக்கு News Lankasri
