வடமுனை - வெலிக்கந்தை வீதியை மறித்து மக்கள் போராட்டம்(Video)
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை,வடமுனை மக்கள் வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊத்துச்சேனை பகுதியில் காடுகளை அழித்து முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊத்துச்சேனை வடமுனை கிராம பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சட்டவிரோத மணல் அகழ்வினால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மண் அகழ்வு காரணமாக அன்றாடம் பயன்படுத்தும் வீதி போக்குவரத்து செய்ய முடியாமலிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு பகுதிகளிலும் லொறிகளில் தினமும் பெருமளவான மண் சட்ட விரோதமான முறையில்
அகழப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.




பணத்தை திருடும் போது நிலாவிடம் வசமாக சிக்கிய பல்லவன் அம்மா, அடுத்து நடந்தது... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam
இந்தியாவில் சிக்கித் தவிக்கும் H-1B ஊழியர்கள்... விசா புதுப்பித்தல் சந்திப்புகள் ரத்து News Lankasri
பாண்டியன் மொத்த குடும்பத்தையும் போலீஸ் ஸ்டேஷன் அனுப்பிய மயில் அம்மா.... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 பரபரப்பு புரொமோ Cineulagam