வடமுனை - வெலிக்கந்தை வீதியை மறித்து மக்கள் போராட்டம்(Video)
மட்டக்களப்பு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஊத்துச்சேனை,வடமுனை மக்கள் வடமுனை-வெலிக்கந்தை வீதியை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
ஊத்துச்சேனை பகுதியில் காடுகளை அழித்து முன்னெடுக்கப்படும் சட்ட விரோத மணல் அகழ்வினை தடுத்து நிறுத்தக்கோரியே இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
ஊத்துச்சேனை வடமுனை கிராம பொதுமக்கள் இணைந்து இந்த போராட்டத்தினை முன்னெடுத்தனர்.
சட்டவிரோத மணல் அகழ்வினால் எதிர்நோக்கும் பிரச்சனைகள் தொடர்பாகவும் மண் அகழ்வு காரணமாக அன்றாடம் பயன்படுத்தும் வீதி போக்குவரத்து செய்ய முடியாமலிருப்பதாகவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
பல்வேறு பகுதிகளிலும் லொறிகளில் தினமும் பெருமளவான மண் சட்ட விரோதமான முறையில்
அகழப்படுவதாகவும் இதன்போது தெரிவிக்கப்பட்டது.




தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை அறியும் பாண்டியன் குடும்பம்.. பரபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் புரோமோ Cineulagam
ஹார்முஸ் நீரிணையை வலுக்கட்டாயமாக திறந்தால்... பிணங்கள் குவியலாம்: எச்சரிக்கும் நிபுணர்கள் News Lankasri
21 மணி நேர அமைதிப் பேச்சு... ஈரானின் நிலைமை மோசமாகப் போகிறது: எச்சரிக்கும் ஜேடி வேன்ஸ் News Lankasri