24 மணித்தியாலங்களிலும் இயங்கும் தடுப்பூசி ஏற்றும் நிலையம்
இலங்கையில் 24 மணித்தியாலங்களிலும் கொவிட் தடுப்பூசி ஏற்றும் நிலையமொன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
முதல் தடவையாக இலங்கையில் இவ்வாறான ஓர் தடுப்பூசி விநியோக நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது.
கொழும்பு விஹாரமஹாதேவி பூங்காவில் இந்த தடுப்பூசி நிலையம் இன்று முதல் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இராணுவத்தினால் இயக்கப்பட்டு வரும் விஹாரமஹாதேவி பூங்காவில் தடுப்பூசி ஏற்றும் நிலையத்தில் எந்த நேரத்திலும் தடுப்பூசி ஏற்றிக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அஸ்ட்ராசெனகா தடுப்பூசி முதல் மாத்திரை ஏற்றப்பட்டவர்களுக்கு இரண்டாம் மாத்திரை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன.