இலங்கையில் தடுப்பூசி செலுத்திக் கொள்ள விரும்பும் 20 - 29 வயதிற்கு உட்பட்டோருக்கு முக்கிய தகவல்
நாடளாவிய ரீதியில் கோவிட் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் கோவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்றைய தினமும் கோவிட் தடுப்பூசி பல இடங்களில் செலுத்தப்படும் நிலையில் இது தொடர்பான விரிவான தகவல்கள் வெளியாகியுள்ளன.
குறித்த இடங்களில் 20 - 29 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதேவேளை இலங்கை மக்கள் தொகையில் நூற்றுக்கு 70 சத வீதமானவர்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல (Keheliya Rambukwella) தெரிவித்துள்ளார்.
20 - 29 வயதானவர்களில் 60 சத வீதமானோருக்கும், 15 - 19 வயதானவர்களில் 32 சத வீதமானோருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.



