தடுப்பூசி பெற்றுக்கொண்டவர்களின் உடல் நிலையில் மாற்றங்கள்! உபுல் ரோஹன விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்
தடுப்பூசிகளை செலுத்திக்கொண்டு மக்களின் சரியான உடல் நிலை மாற்றங்கள் பரிசோதிக்கும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் என பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத் தலைவர் உபுல் ரோஹன தெரிவித்துள்ளார்.
தடுப்பூசியால் குறைந்துள்ள மரணங்களின் எண்ணிக்கை மற்றும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை, தடுப்பூசி ஏற்றப்படும் உடல் நிலை மாற்றம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்தியை அடிப்படையாக கொண்டு இந்த பரிசோதனை நடத்தப்பட வேண்டும்.
தொடர்ந்தும் பரிசோதனைகளை செய்து, தடுப்பூ காரணமாக கிடைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இலங்கை மக்களுக்கு எவ்வளவு காலம் இருக்கின்றது என்பதை கண்டறிந்து மூன்றாவது தடுப்பூசியை வழங்க அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.