காலிமுகத்திடல் போராட்டம்: சேதமடைந்த ஜனாதிபதி மாளிகை மறுசீரமைப்பு செலவு!
காலிமுகத்திடலில் இடம் பெற்ற போராட்டங்களில் சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கான செலவு மதிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் காலி முகத்திடல் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய போராட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.
இப்போராட்டத்தின் போது போராட்டக்காரர்களால் சேதமடைந்த ஜனாதிபதி மாளிகையின் திருத்தப்பணிகளுக்கு 364.8 மில்லியன் ரூபாய் செலவாகும் என அரச பொறியியல் கூட்டுத்தாபனம் மதிப்பிட்டுள்ளது.

அந்த அறிக்கையில் மரத்திலான உபகரணங்கள், வரலாற்று ஓவியங்கள், உடற்பயிற்சி மைய உபகரணங்கள் மற்றும் வாகனங்களுக்கு சேதம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுசீரமைப்பு பணிகள்

அறிக்கையின்படி, பழுதுபார்க்கும் இரண்டு நிலைகளைக் குறிக்கிறது. முதல் கட்டத்தின் கீழ், மறுசீரமைப்பு வேலைகள் செயல்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
இரண்டாவது கட்டத்தில், வசிக்கும் பகுதிகள் மற்றும் அலுவலக அறைகள்
சரிசெய்யப்படும்.
மறுசீரமைப்பு பணிகளுக்கு பொது நிதி பயன்படுத்தப்பட வேண்டும் என்று அரச மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்தார்