உலகின் பிரபல விமான நிறுனத்தில் பணியாற்ற இலங்கையர்களுக்கு வாய்ப்பு
உலகின் மிகப்பெரிய சர்வதேச விமான நிறுவனமான எமிரேட்ஸ், டுபாயை தளமாகக் கொண்ட அதன் பொறியியல் பணியாளர்களுக்கு திறமையான தொழில்நுட்ப வல்லுநர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்காக தேர்வு நடவடிக்கையை இலங்கையில் மேற்கொள்ளவுள்ளது.
எதிர்வரும் மார்ச் 10 ஆம் திகதி கொழும்பில் இது தொடர்வு விசேட செயலமர்வை நடத்தப்போவதாக நிறுவனம் அறிவித்துள்ளது. ஆர்வமுள்ளவர்கள் www.emiratesgroup careers.com/engineering என்ற இணையதளத்தில் இந்த அமர்விற்கு முன்கூட்டியே பதிவு செய்ய வேண்டும்.
எமிரேட்ஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டில் 350 பதவிகளுக்கு 17,300 நிபுணர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளது.
இலங்கையர்களுக்கு வாய்ப்பு
இது நிறுவனத்தின் தொழில்நுட்ப திறன்களை வலுப்படுத்துவதையும் சர்வதேச விமானப் போக்குவரத்துத் துறையில் பராமரிப்பு தரத்தை உயர்த்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.

விண்ணப்பதாரர்களுக்கு டுபாயில் வேலை வாய்ப்புகள், சம்பளம் மற்றும் சலுகைகள் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்பு கிடைக்கும்.
தொழில் பாதைகள் மற்றும் அவர்களின் முன்னேற்றம் குறித்த நடைமுறை நுண்ணறிவுகளைப் பெற விமான நிறுவனத்தின் பொறியாளர்கள் மற்றும் முகாமையாளர்களுடன் நேரடியாகத் தொடர்பு கொள்ளும் வாய்ப்பையும் அவர்கள் பெறுவார்கள்.
விண்வெளி பொறியியல்
உலகின் மிகப்பெரிய விமானக் குழுவுடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் டுபாயில் நீண்டகால வாழ்க்கையை உருவாக்க எங்கள் பொறியாளர்கள் வாய்ப்பைப் பெறுவார்கள் என எமிரேட்ஸ் நிறுவனத்தின் இலங்கை மற்றும் மாலைத்தீவுகளுக்கான முகாமையாளர் ஜாபர் முகமது தெரிவித்துள்ளார்.

950 மில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் டுபாய் உலக வர்த்தக மையத்தில் கட்டப்படவுள்ள எங்கள் அதிநவீன பொறியியல் வளாகம், தனித்துவமான விண்வெளி பொறியியல் சேவைகளை உள்ளடக்கும்.
இது எங்கள் தொழில்நுட்ப வல்லுநர்களுக்கு அவர்களின் திறன்களை வளர்த்துக் கொள்ளவும், மிக உயர்ந்த உலகளாவிய தரங்களைப் பராமரிக்கும் அதே வேளையில் எமிரேட்ஸின் உலகளாவிய செயல்பாடுகளை ஆதரிக்கவும் தனித்துவமான வாய்ப்புகளை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 16 மணி நேரம் முன்
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam