இலங்கை வரும் அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் அரசாங்கத்தின் சிறப்பு பிரதிநிதி ஒருவர் எதிர்வரும் 10 ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
தெற்காசிய பிராந்தியம் தொடர்பான அமெரிக்காவின் பாதுகாப்பு ஆலோசகர் சுமோனா குஹா(sumona guha) என்ற அதிகாரியே இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இந்திய வம்சாவளி பெண் அதிகாரி
இந்திய வம்சாவளியான இந்த பெண் அதிகாரி பாதுகாப்பு துறை சம்பந்தமான நிபுணர் என பேசப்படுகிறது. இலங்கை வரும் அமெரிக்காவின் சிறப்பு பிரதிநிதி ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளும் சுமோனா, அதன் பின்னர் இந்தியா மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கு விஜயம் செய்ய உள்ளார். இதன் போது இந்திய பெருங்கடல் பிராந்தியத்தில் காணப்படும் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளதாக தெரியவருகிறது.
இதனிடையே இந்திய அரசின் உயர் மட்ட அதிகாரிகள் பலர் இலங்கைக்கு விஜயம் செய்தற்காக கடந்த சில தினங்களில் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ள பின்னணியில், ஜோ பைடனின் உயர் மட்ட பாதுகாப்பு பிரதிநிதி இலங்கைக்கு விஜயம் செய்வது முக்கியத்துவம் மிக்கது என பேசப்படுகிறது.