அமெரிக்க - உக்ரைன் ஜனாதிபதிகள் பேச்சுவார்த்தை: ரஷ்யா கிளர்ச்சி குறித்து முக்கிய விவாதம்
உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியுடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
இந்த பேச்சு வார்த்தை நேற்றைய தினம் (25.06.2023) இடம்பெற்றுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது.
இதன்போது, ரஷ்யாவில் அண்மையில் ஏற்பட்ட உள்நாட்டுக் கிளர்ச்சி குறித்து விவாதித்துள்ளதாகவும், அமெரிக்கா - உக்ரைன் நாடுகளின் ஒத்துழைப்பு குறித்தும் உக்ரைனின் தற்போதைய எதிர் தாக்குதல் குறித்து விவாதிக்கப்பட்டது என்றும் வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
The White House on Sunday confirmed US President Biden had spoken with Zelensky, saying the two leaders 'discussed recent events in Russia' as well as 'Ukraine's ongoing counter-offensive.', reports AFP https://t.co/NM7EZ3hmOg
— ANI (@ANI) June 26, 2023
உக்ரைன்-ரஷ்யா போர்
உக்ரைன்-ரஷ்யா போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது. வொஷிங்டன், உக்ரைன் மீது ரஷ்யா தனது இராணுவ நடவடிக்கைகளை ஆரம்பித்து ஒரு வருடத்தைத் தாண்டியுள்ளது.
ரஷ்யாவின் தாக்குதலுக்கு மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் இராணுவம் தொடர்ந்து பதிலடி கொடுத்து வருகிறது. இதனால் போர் முடிவுக்கு வராமல் நீண்டுகொண்டே செல்கிறது.
இதற்கிடையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், எவ்ஜெனி புரிகோசின் தலைமையிலான வாக்னர் எனப்படும் தனியார் இராணுவ அமைப்பு ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் இராணுவ கட்டுப்பட்டு மையத்தை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததாகவும், மொஸ்கோ நோக்கி முன்னோக்கிச் செல்ல இருப்பதாகவும் அறிவித்திருந்தார்.
I spoke with ?? President @POTUS. A positive and inspiring conversation.
— Володимир Зеленський (@ZelenskyyUa) June 25, 2023
We discussed the course of hostilities and the processes taking place in Russia. The world must put pressure on Russia until international order is restored.
I thanked the @POTUS for the unflagging…
ரஷ்யாவில் ஆயுத புரட்சி
இதனால் ரஷ்யாவில் ஆயுத புரட்சி ஏற்படும் சூழ்நிலை உருவானது. பின்னர், பெலாரஸ் ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ உடன் ஒப்பந்தம் ஒன்று செய்யப்பட்டுள்ளதாகக் கூறியதைத் தொடர்ந்து, உயிரிழப்புகளைத் தவிர்ப்பதற்காகத் தனது படைகள் வெளியேறுவதாக எவ்ஜெனி புரிகோசின் தெரிவித்துள்ளார்.
இதனால் ஆயுத கிளர்ச்சி முடிவுக்கு வரவிருப்பதாக கூறப்படுகின்றது.
இந்த நிலையில், உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி உடன் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் நேற்றைய தினம் தொலைபேசியில் பேசியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |