காசாவில் பொது போர் நிறுத்தத்தை எதிர்க்கும் அமெரிக்கா - செய்திகளின் தொகுப்பு
காசாவில் பொதுவான போர் நிறுத்தத்தை மேற்கொள்வதில் உடன்பாடு இல்லை என அமெரிக்க தரப்பு தெரிவித்துள்ளது.
கடந்த ஒக்டோபர் 07 திகதி முதல் காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பிற்கும் இஸ்ரேலுக்கும் கடுமையான போர் நடைபெற்று வரும் நிலையில், ஹமாஸ் அமைப்பின் தளங்களை தேடி இஸ்ரேல் அழித்து வருகின்றது.
இந்த போர் தாக்குதல்களினால் பெண்கள், குழந்தைகள் என 24,762 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 62,108 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்ட அமெரிக்க தேசிய பாதுகாப்பு கவுன்சில் மூலோபாய தொடர்புகளுக்கான ஒருங்கிணைப்பாளர் ஜான் கிர்பி, “இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போர் நடவடிக்கையில் “பொது போர் நிறுத்தம்” கொண்டு வருவதை தனது நாடு எதிர்ப்பார்கின்றது.
இந்த போர் நிறுத்தம் ஹமாஸ் படைகளுக்கு நன்மை செய்வதை விட வேறு யாருக்கும் நன்மை பயக்கும் என்று நாங்கள் நம்பவில்லை.
அதே சமயம் நாங்கள் பிணைக் கைதிகளை மீட்க உதவும் மனிதாபிமான வெளியேற்றம் மற்றும் பொதுமக்களுக்கான மருத்துவ உதவிகள் ஆகியவற்றை வழங்க தொடர்ந்து ஆதரவு வழங்குவோம்” என தெரிவித்துள்ளார்.
இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை தொகுத்து வருகின்றது இன்றைய நாளுக்கான மாலைநேர செய்திகளின் தொகுப்பு,
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |