இலங்கைக்கு அமெரிக்கா விதித்துள்ள அதிரடி தடை...!
இலங்கையின் தற்போதைய அரசாங்கத்திலும் ஊழல் இடம்பெறுவதாக அமெரிக்காவால் அறிக்கையொன்று வெளியாகியுள்ளது என்று பிரித்தானிய இராணுவ ஆய்வாளர் அரூஸ் குறிப்பிட்டுள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்,
2025ஆம் ஆண்டிற்கான இலங்கை தொடர்பான அறிக்கை வெளியாகியுள்ளது. குறித்த அறிக்கையில் கூறப்பட்ட விடயம் இலங்கைக்கு சாதகமானதாக இல்லை.
இலங்கையில் தற்போதும் ஊழல் தொடர்வதால் முதலீடு செய்வதற்கு இலங்கை உகந்த நாடு அல்ல என குறிப்பிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமில்லாமல் இலங்கை மீது தடையொன்றையும் விதித்துள்ளனர் என குறிப்பிட்டார்.
இந்த விடயங்கள் தொடர்பில் அலசி ஆராய்கின்றது லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சி...





அவசர சிகிச்சைப்பிரிவில் தீ... மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த எட்டு நோயாளிகள் பலி News Lankasri
