யாழில் தமிழர்களுக்காக அமெரிக்க தூதரக அலுவலகம் தேவை! விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
யாழ்ப்பாணத்தில் தமிழர்களுக்காக அமெரிக்க தூதரக அலுவலகம் தேவை என்ற கோரிக்கையொன்று முன்வைக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகம் அமையுமானால், தமிழர் பிரதேசத்தில் சீன ஊடுருவலை நிறுத்துவதுடன், இலங்கை அரசாங்கத்தின் அனைத்து சட்டவிரோத, அடக்குமுறை நடவடிக்கைகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும் என்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் தாய்மார் தெரிவித்துள்ளனர்.
இலங்கைக்கான அமெரிக்க தூதர் ஜூலி சங் இந்த செய்தியை வொஷிங்டனுக்கு தெரிவிப்பார் என்று நம்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.
அதே நேரத்தில், தாம் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்துக்கும் இந்தக் கோரிக்கை கடிதத்தை அனுப்புவதாக, காணாமல்போன தமிழர்களின் தாய்மார்கள் தெரிவித்துள்ளனர்.
காணாமல்போன தமிழர்களின் தாய்மார்களின் அறிக்கை
ஊடகவியலாளர் தாரகி என்ற சிவராம் 2005ஆம் ஆண்டு இதேநாளில் கொலை செய்யப்பட்டமையின் நினைவேந்தலை முன்னிட்டு இந்த கோரிக்கையை காணாமல்போன தமிழர்களின் தாய்மார்கள் அறிக்கையாக வெளியிட்டுள்ளனர்.
காணாமல்போன தமிழ் பிள்ளைகளை கண்டறியவும், இலங்கையில் அரசிடம் இருந்து அனைத்துத் தமிழர்களையும் காப்பாற்றவும், தமிழர் இறையாண்மையைப் பெறுவதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் உதவியைப் பெறவும், தாம் நடத்தி வரும் போராட்டத்தின் 2259வது நாள் இன்றாகும்.
இன்று 18 வருடங்களுக்கு முன்னர் 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் திகதி கொழும்பில் தமிழ் ஊடகவியலாளர் தராக்கி சிவராம் படுகொலை செய்யப்பட்டார். தம்மை விட்டு விலகாத சிறப்பு மனிதர்கள் நம் வாழ்வில் இருக்கிறார்கள் அவர்கள் மறைந்த பின்னரும் தம்முடன் இருக்கிறார்கள், அவர்களில் தாரகி சிவராம் ஒருவராவார். சத்தியத்தின் காரணத்திற்காக அவரது மக்களுக்கும் உலகிற்கும் அவர் ஆற்றிய சேவை ஒரு சக்திவாய்ந்த மரபுரிமையாக உள்ளது.
சிவராமின் பத்திரிகைப் பணி தமிழர்களுக்கும் அமெரிக்க அரசுத் துறைகளுக்கும் ஒரு பொக்கிஷமாக இருந்தது. இனப் போரின் போதும் அதன் பின்னரும் அமெரிக்க அரசாங்கத்தின் அவதானிப்பு தொடர்பில் காணாமல் போன தமிழர்களின் தாய்மார்கள் நன்றி தெரிவிக்க விரும்புகின்றனர்.
அத்துடன் இலங்கையின் முன்னாள் கடற்படைத் தளபதியுமான வசந்த கரன்னாகொட மற்றும் அவரது குடும்பத்தினர் மீது அமெரிக்கர் விதித்த தடையை தாம் வரவேற்பதாகவும் தமிழ் தாய்மாரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்க அலுவலகத்தை திறப்பதன் மூலம்;, தமிழ் பிராந்தியத்தில் என்ன நடக்கிறது என்பதை அமெரிக்கா உன்னிப்பாகக் கண்காணிக்க முடியும். யாழ்ப்பாணத்தில் அமெரிக்கா இருப்பதன் மூலம் இலங்கை அரசாங்கத்தின் உத்தரவின் பேரில் நிகழும் பல சட்டவிரோத, அடக்குமுறை நடவடிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும்.
அத்துடன் இரவு கொலைகள் மற்றும் கொள்ளைகள், தொடர்ச்சியான சட்டவிரோத கண்காணிப்பு மற்றும் உளவு, அத்துடன் நில அபகரிப்பு. அதில் இந்து கோவில்களை இழிவுபடுத்துதல் மற்றும் கைப்பற்றுதல் ஆகியவையும் தடுக்கப்படும்.
முல்லைத்தீவு, பூநகரி, கிளிநொச்சி ஆகிய பிரதேசங்களில் பெருமளவிலான காணிகளை சீனர்கள் கொள்வனவு செய்யத் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்த
சூழ்நிலையில் யாழ்ப்பாணத்தில் அமெரிக்கத் தூதரகம் அமைந்தால், அது தமிழர்
பிரதேசத்தில் சீனப் படையெடுப்பை நிறுத்தும் என்றும் காணாமல் போன தமிழர்கள்
சங்கத்தின் சார்பில் அதன் செயலாளர் ஜி ராஜ்குமார் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
