நாட்டின் டொலர் கையிருப்பு குறித்து வெளியான மகிழ்ச்சி தகவல்
நாட்டின் டொலர் கையிருப்பு அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாத இறுதியில் நாட்டின் டொலர் கையிருப்பு 2120 மில்லியன் டொலர்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் மாத இறுதியில் இந்த தொகை 1898 ஆக காணப்பட்டதாகவும் ஜனவரி மாத இறுதியில் இந்த தொகை 11.7 வீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
அந்நிய செலாவணி கையிருப்பு 1863 மில்லியன் டொலர்களிலிருந்து ஜனவரி மாத இறுதியில் 2064 மில்லியன் டொலர்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மத்திய வங்கியிடமிருந்த தங்க கையிருப்பும் 28 மில்லியன் டொலர்களிலிருந்து 29 மில்லியன் டொலர்களாக உயர்வடைந்துள்ளது.