கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மத நம்பிக்கைகளை மதிக்க இலங்கைக்கு அமெரிக்கா அழைப்பு!
கொரோனா தொற்றினால் ஏற்பட்டுள்ள சவால்களினால் மக்களின் மத நம்பிக்கைகள் இல்லாமல் செய்யப்படக்கூடாது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா பி. டெப்லிட்ஸ் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், மக்களின் உரிமைகள் மற்றும் கண்ணியத்தை மதிக்க இலங்கை அதிகாரிகளுக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர் இதனை கூறியுள்ளார்.
1955ம் ஆண்டில் இலங்கையால் அங்கீகரிக்கப்பட்ட UDHR பிரிவு 18 மூலம், போதனை, நடைமுறை, வழிபாடு மற்றும் அனுசரிப்பு ஆகியவற்றில் தங்கள் மதம் அல்லது நம்பிக்கையை வெளிப்படுத்த அனைவருக்கும் உரிமை உண்டு என்பதை தூதர் நினைவுபடுத்தினார்.
கொரோனா உலகளாவிய சவால்களை உருவாக்கியது. ஆனால் அது ஒருவருக்கொருவர் நம்பும் இரக்கத்தையும், மரியாதையையும் இழக்கக்கூடாது.
இந்த தொற்றுநோயால் அன்புக்குரியவர்களை இழந்த அனைத்து குடும்பங்களுடனும் நாங்கள் நிற்கிறோம்.
”
"சர்வதேச பொது சுகாதார வழிகாட்டுதல்களின்படி அவர்களின் நம்பிக்கையை கடைபிடிக்க அனுமதிப்பதன் மூலம் அவர்களின் உரிமைகள் மற்றும் கண்ணியம் மதிக்கப்பட வேண்டும்" என்று அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

பாகிஸ்தான், சீனாவுக்கு மேலும் ஒரு கெட்ட செய்தி... ET-LDHCM ஏவுகணையை சோதிக்க தயாராகும் இந்தியா News Lankasri

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam

மருத்துவமனையில் ஏற்பட்ட சம்பவம், சீதாவை நினைக்கும் முத்து, என்ன ஆனது?.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam
