உக்ரைனுக்கு 100 மில்லியன் டொலர் மதிப்புள்ள ஏவுகணைகளை வழங்க அமெரிக்கா ஒப்புதல்
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் 40 நாட்களுக்கும் மேலாக தொடர்ந்து நீடித்து வருகின்றது.
உக்ரைனின் பல்வேறு நகரங்களும் பேரழிவை சந்தித்துள்ளதுடன்,பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனால், உக்ரைனுக்கு உதவும் வகையில், அமெரிக்கா முழு ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்து, உக்ரைன் அரசாங்கத்திற்கு 500 மில்லியன் டொலர்களை நேரடி பட்ஜெட் உதவியாக வழங்கப்படும் என்று அதிபர் ஜோ பைடன் தெரிவித்ததாக வெள்ளை மாளிகை ஏற்கனவே அறிவித்திருந்தது.
இந்நிலையில், 100 மில்லியன் அமெரிக்க டொலர் மதிப்பிலான ஏவுகணைகளை உக்ரைனுக்கு வழங்க அதிபர் ஜோ பைடன் ஒப்புதல் அளித்துள்ளதாக நிர்வாக அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.