இரசாயன ஆயுதங்களை பயன்படுத்திய ரஷ்யா : அமெரிக்கா குற்றச்சாட்டு
உக்ரைன் போரில் ரஷ்ய ராணுவம் இரசாயன ஆயுதங்களை பயன்படுத்தியதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
இரசாயன ஆயுதங்கள் மீதான உலகளாவிய தடையை ரஷ்யா மீறியுள்ளதாக அமெரிக்கா சுட்டிக்காட்டியுள்ளது.
உக்ரைன் வீரர்களுக்கு எதிராக ரஷ்ய ராணுவம் "குளோரோபிரின்" என்ற இரசாயன மூச்சுத்திணறலை பயன்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.
இராணுவ தந்திரம்
உக்ரைனில் தமது எதிர் கிளர்ச்சியாளர்களை நிலைநிறுத்துவதற்கு ரஷ்ய அதிகாரிகள் ஒரு இராணுவ தந்திரமாக செயற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.
இது போன்ற செயல்களால் உலக அளவில் இரசாயன ஆயுதங்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரஷ்யா மீறுவதாக அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |