சூறாவளியின் கோர தாண்டவம் இன்னும் முடியவில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

By Chandramathi Dec 10, 2022 12:25 PM GMT
Chandramathi

Chandramathi

in சமூகம்
Report

நாடளாவிய ரீதியில் பெரும் பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ள மாண்டஸ் சூறாவளியின் தற்போதைய நிலை தொடர்பில் பல தகவல்கள் வெளிவந்துள்ளன.

கடந்த 5 ஆம் திகதி தென்மேற்கு வங்ககடலில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது.

இந்த தாழ்வு பகுதி, தாழ்வு மண்டலமாகவும், நேற்று முன்தினம் அதிகாலையில் புயலாகவும் வலுவடைந்தது.

புதிய காற்றழுத்த தாழ்வு

இதன் காரணமாக தமிழகத்தின் வட கடலோர மாவட்டங்கள் உட்பட இலங்கையின் சில இடங்களில் கடும் மழை பெய்தது.

இதனால் பலத்த காற்றின் ஊடாக இந்தியாவில் இருந்து இலங்கையின் வான்வெளிக்கு தூசித் துகள்கள் வருகை தர ஆரம்பித்தது.

சூறாவளியின் கோர தாண்டவம் இன்னும் முடியவில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Urgent Notice To The People

இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியது.

காற்றில் ஏற்பட்ட இந்த ஆரோக்கியமற்ற நிலையானது தற்போது வரை நீடிப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை பல்வேறு பகுதிகளில் தற்போது நிலவும் காற்று மாசு நிலை காரணமாக சுகாதாரப் பாதுகாப்பிற்காக முகக்கவசத்தை அணியுமாறு மக்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இலங்கையை சூழவுள்ள கடற்பரப்புகளில் மாண்டஸ் சூறாவளியின் தாக்கம் படிப்படியாக குறையும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

யாழ்ப்பாணத்தில் இருந்து 280 கிலோமீட்டர் தூரம்

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் 'மாண்டஸ்' சூறாவளி யாழ்ப்பாணத்தில் இருந்து 280 கிலோமீட்டர் வட-வடகிழக்கே நிலைகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சூறாவளி, நேற்று (09) இரவு 08.30 மணிக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் தெற்கு ஆந்திரா கடற்கரையின் ஊடாக இன்று அதிகாலை கடந்ததுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சூறாவளியின் கோர தாண்டவம் இன்னும் முடியவில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Urgent Notice To The People

எனினும் அதன் தாக்கமாக, சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் தொடர்ந்தும் மழை பெய்யும் என கூறப்பட்டுள்ளது.

அத்துடன் வடக்கு, வடமத்திய, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையத்தின் தகவலின்படி, நேற்று காலை தீவிர புயல், மீண்டும் புயலாக வலுவிழந்ததுள்ளது.

அத்துடன் மாண்டஸ் புயலின் வெளிப்பகுதி மாமல்லபுரம் அருகே கரையை கடக்க ஆரம்பித்ததுள்ளதாகவும் புயலின் பின்பகுதி இன்னும் சில மணி நேரத்தில் முழுமையாக கரையை கடக்கும் என்று அறிவித்துள்ளது.

கன மழை தொடர்பான தகவல்

சூறாவளியின் கோர தாண்டவம் இன்னும் முடியவில்லை! நாட்டு மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை | Urgent Notice To The People

புயல் கரையை கடந்த நிலையிலும், தமிழகத்தில் இன்றும், நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கின் ஆழமான மற்றும் ஆழமற்ற கடல் பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கனமழையுடன் பெய்யும் சாத்தியம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை ஊடாக மட்டக்களப்பு வரையான கடற்பரப்புகளில் 2.5 மீட்டர் முதல் 3.5 மீட்டர் வரை அலைகள் எழக்கூடும் எனவும் அறிவித்துள்ளது.

கரையோர கடற்பரப்புகளில் அலைகள் 2.0 மீட்டர் முதல் 2.5 மீட்டர் வரை அதிகரிக்கக் கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.

10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், கிளிநொச்சி, டென்மார்க், Denmark, London, United Kingdom

01 Jun, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, அச்சுவேலி, நெதர்லாந்து, Netherlands

20 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி, திருகோணமலை, உவர்மலை

21 May, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி மேற்கு, Wembley, United Kingdom, Milton Keynes, United Kingdom

21 May, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அராலி, உரும்பிராய், Toronto, Canada

16 May, 2025
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, மாவிட்டபுரம்

16 May, 2025
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, கொழும்பு, சென்னை, India, Frankfurt, Germany, இந்தோனேசியா, Indonesia, Buenos Aires, Argentina

15 May, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 8ம் வட்டாரம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அச்சுவேலி பத்தமேனி, Hölstein, Switzerland

20 Apr, 2025
மரண அறிவித்தல்

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ் அச்சுவேலி தெற்கு, Jaffna, Chur, Switzerland

16 Apr, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, New Malden, United Kingdom

09 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, முரசுமோட்டை, Vancouver, Canada, Mississauga, Canada

19 May, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், வவுனியா

16 May, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, திருகோணமலை, மட்டுவில் தெற்கு, பேர்ண், Switzerland

18 May, 2015
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, கொழும்பு, Maldives, Toronto, Canada

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, யாழ்ப்பாணம்

17 May, 2015
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, அரியாலை, Chelles, France

14 May, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், நியூ யோர்க், United States

16 May, 2015
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மெல்போன், Australia

13 May, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருநகர் தெற்கு கிளிநொச்சி

28 May, 2024
6ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US