மகாவலி ஆற்றை அண்மித்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தல்
மத்திய மலைநாட்டில் நிலவும் மழையுடனான வானிலை காரணமாக பொல்கொல்ல அணைக்கட்டின் நான்கு வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
பொல்கொல்ல, விக்டோரியா, ரந்தெனிகல மற்றும் ரன்டெம்பே ஆகிய நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக மகாவலி அதிகாரசபை தெரிவித்துள்ளது.
மகாவலி ஆற்றின் நீர் மட்டம் உயர்வடைந்துள்ளமையினால் நேற்று (09.12.2023) அதிகாலை முதல் வன்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொறியியலாளர் அலுவலகம் எச்சரிக்கை
இதன் காரணமாக பொல்கொல்ல நீர்த்தேக்கம் மற்றும் மகாவலி கங்கையை அண்மித்த பகுதியில் வாழும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அணைக்கு பொறுப்பான பொறியியலாளர் அலுவலகம் எச்சரித்துள்ளது.
மேலும், மகாவலி ஆற்றுக்கு அருகில் உள்ள பொது மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அட சன் டிவி சீரியல் நடிகைகளா இவர்கள், எல்லோரும் எவ்வளவு அழகு பாருங்க... இதுவரை பார்க்காத போட்டோ Cineulagam
ஸ்ருதி வீட்டு உணவால் அவதிப்படும் விஜயா, எலி தொல்லையில் மாட்டிக்கொண்ட மனோஜ்.. சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ Cineulagam