நன்கொடை பணத்தில் நிர்மாணிக்கப்படும் போலி தலதா மாளிகை! ஜனாதிபதிக்கு பறந்த கடிதம்
போலி தலதா மாளிகையொன்று உருவாக்கப்பட்டு நிர்மாணிக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளதாக அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் கூட்டறிக்கை விடுத்துள்ளார்.
குருநாகல் வடகட வீதியில் பொத்துஹெர என்ற இடத்தில் ஜனக சேனாதிபதி என்ற நபரால் போலியான போலி தலதா மாளிகை நிர்மாணிக்கப்பட்டு வருவதாக சுட்டிக்காட்டியுள்ளது.
போலி தலதா மாளிகை கட்டுக்கதையால் பல உள்ளூர் மற்றும் வெளியூர் மக்கள் ஏமாற்றப்பட்டு பணம், தங்கம் போன்றவற்றை நன்கொடையாக வழங்கி வருகின்றமையும் தெரியவந்துள்ளது.

ஜனாதிபதிக்கு பறந்த அவசர கடிதம்
மேலும், பௌத்த மக்களின் உள்ளங்களை புண்படுத்தும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக பல்வேறு கருத்துக்கள் வெளியிடப்படுவது தொடர்பிலும் மகாநாயக்க தேரர்களினால் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள பௌத்த மதத்தைப் பாதுகாத்து வளர்ப்பதற்கு கட்டுப்பட்ட அரசாங்கம் இவ்வாறான பௌத்த விரோதச் செயல்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை, சம்பவம் தொடர்பில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி மற்றும் மல்வத்து மாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
அடேங்கப்பா நம்ம முத்துவா இது, ஆளே மாறிட்டாரே, என்ன செய்துள்ளார் பாருங்க... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ Cineulagam
பலமுறை ஏமாற்றப்பட்டேன், கடவுள் நீதி வழங்குவார் - கிரிக்கெட் வீரரின் வருங்கால மனைவி பதிவு News Lankasri
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam