பாரிய மோசடி குறித்து பொது மக்களுக்கு பொலிஸார் எச்சரிக்கை
பொலிஸ் உத்தியோகத்தர்கள் என கூறி சாதாரண உடையில் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு வருபவர்களின் அடையாள அட்டையை சரிபார்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ வாகன சாரதிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இரகசிய பொலிஸ் உத்தியோகத்தர்களை போன்று விசேட பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடை அணிந்து இவ்வாறான கடமைகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சாரதி அடையாள அட்டை
ஆனால் வாகனங்களை சோதனையிட வருபவர்கள் தொடர்பில் சந்தேகம் ஏற்பட்டால் எந்தவொரு சாரதியும் அடையாள அட்டையை சரிபார்த்துக் கொள்ளலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

வெளியாட்கள் சிலர் பொலிஸாரின் பெயரில் இலஞ்சம் பெறும் நடவடிக்கைகள் அல்லது வாகனங்களில் பயணிக்கும் நபர்களின் பொருட்களை திருடலாம் என்பதால் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இந்த அறிவித்தலை விடுத்துள்ளார்.
அன்புக்கரசிற்கு பார்கவி கொடுத்த தரமான பதிலடி, கரிகாலனின் கிரிமினல் பிளான்... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
மீனாவிற்கு ஷாக் கொடுத்த செந்தில் என்ன செய்யப்போகிறார், பெரிய சிக்கலில் மயில்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 எபிசோட் Cineulagam
19 நாள் முடிவில் துருவ் விக்ரமின் பைசன் காளமாடன் படம் செய்துள்ள மொத்த வசூல்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam