மட்டக்களப்பில் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் (Photos)
நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையை தொடர்ந்து அரசாங்கத்தை வீட்டுக்கு செல்ல கோரி மட்டக்களப்பில் பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இந்த ஆர்ப்பாட்டத்தினை இன்று(08) காலை 10 மணி அளவில் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களும், பொது அமைப்புகளும் இணைந்து போராட்டத்தினை முன்னெடுத்துள்ளனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கிழக்கு பல்கலைக்கழகத்தில் இருந்து பேரணியாக ஆரம்பித்து செங்கலடி சந்தி வரை சென்று செங்கலடியில் “கோட்டா கோ கம” என பிராந்திய கிராமம் உருவாக்கப்பட்டுள்ளதுடன், தொடர்ச்சியாக போராட்டம் தொடரும் எனவும் தெரிவித்துள்ளனர்.