கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு தனியான பல்கலைக்கழகம்
உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத்திற்குத் தனி பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட குழுவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனியான பல்கலைக்கழகம்
அரசாங்கத்தின் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வருடம் தோறும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் பிரேரணையொன்றை முன்மொழிந்துள்ளார்.
அத்துடன், உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் மேற்படி நாடாளுமன்ற குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
அரசியல்வாதிகள் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மறைத்துவைத்துள்ள கோடிக்கணக்கான பணம் - எடுக்கப்பட்டுள்ள அதிரடி நடவடிக்கை
ஹோர்முஸ் நீரிணையில் செல்லும் கப்பல்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை - வீழ்த்தப்பட்ட 8 அமெரிக்க தளங்கள்
ஹரக் கட்டா பணம் வழங்கிய பட்டியலில் பெரும் புள்ளிகளின் பெயர்கள்! இலங்கை வரலாற்றில் பதிவாகவுள்ள பெரும் சம்பவம்
பஹ்ரைன் நாட்டின் மீது ஈரான் ட்ரோன் தாக்குதல்: மத்திய கிழக்கில் மீண்டும் அதிகரிக்கும் பதற்றம் News Lankasri