கணினி மற்றும் தகவல் தொழில்நுட்பத்திற்கு தனியான பல்கலைக்கழகம்
உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்தும் வகையில் கணினி மற்றும் தகவல் தொழிநுட்பத்திற்குத் தனி பல்கலைக்கழகம் ஒன்றை உருவாக்க யோசனை முன்மொழியப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் பேராசிரியர் சம்பத் அமரதுங்க இந்த யோசனையை முன்வைத்துள்ளார்.
இலங்கையில் உயர்கல்வி வாய்ப்புகளை விரிவுபடுத்துவது தொடர்பாக உரிய பரிந்துரைகளை வழங்குவதற்கான நாடாளுமன்ற விசேட குழுவில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தனியான பல்கலைக்கழகம்
அரசாங்கத்தின் பல்கலைக்கழகங்களில் மாணவர் சேர்க்கை எண்ணிக்கை வருடம் தோறும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது.
இந்நிலையில் கணனி மற்றும் தகவல் தொழில்நுட்பம் தொடர்பில் தனியான பல்கலைக்கழகம் அமைக்கப்பட வேண்டும் என்று அவர் பிரேரணையொன்றை முன்மொழிந்துள்ளார்.
அத்துடன், உயர்கல்வித் துறையில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் தொடர்பான பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பரிந்துரைகளும் மேற்படி நாடாளுமன்ற குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri
மூன்றாம் உலகப்போர் வெடித்தால் சேமித்துவைக்கவேண்டிய 9 உணவுகள்: பிரித்தானிய நிறுவனம் ஆலோசனை News Lankasri
ரஞ்சி தொடரில் கருண் நாயர் 174 ரன் விளாசல்! அர்ஜுன் டெண்டுல்கர் 100 ஓட்டங்களுக்கு 3 விக்கெட் News Lankasri
34 வயதில் இத்தனை கோடி சொத்துக்கு அதிபதியா நடிகை அமலா பால்.. கேரளாவில் சொந்தமாக சொகுசு பங்களா Cineulagam