பொதுக் கூட்டமைப்புக்கு தயாராகும் ஐக்கிய மக்கள் சக்தி
அரசியல் மேடையில் பொதுக் கூட்டமைப்பு ஒன்றுக்கு ஐக்கிய மக்கள் சக்தி தமது நகர்வுகளை ஆரம்பித்துள்ளது.
அரசியலமைப்பு திருத்தங்களுக்கு பின்னர் சாத்தியமான ஜனாதிபதி தேர்தலுக்கு இந்த ஆண்டு ஒரு வலுவான வாய்ப்பாக இருப்பதால், இந்த செயற்பாடு முன்னெடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜனாதிபதி தேர்தலுக்கான வாய்ப்புக்கள்
இந்த வருட இறுதியில் ஜனாதிபதி தேர்தலுக்கான வாய்ப்புக்களும் அதன் பின்னர் நாடாளுமன்ற தேர்தல்கள், மாகாண சபைத் தேர்தல்கள் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்கள் என்ற அடிப்படையில் தேர்தல்கள் இடம்பெறுவதற்கான வாய்ப்புக்களும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பிரச்சினைகளை தீர்ப்பதற்கு நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒரு ஒருங்கிணைந்த ஏற்பாடு தேவை என்பது பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சிந்தனையாக உள்ளது.
மிக விரைவில் விவாதங்கள்
இந்தநிலையில் ஒரு புதிய அரசியல் தளத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணைந்து செயல்பட மற்ற எதிர்க்கட்சிகளுடன் தாங்கள் விவாதித்து வருதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
இதில் விருப்பமுள்ள அனைத்து தரப்பினரும் வரவேற்கப்படுகிறார்கள் என்றும் மிக விரைவில் விவாதங்கள் தொடரவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஒவ்வொரு திங்கட்கிழமைகளிலும் கட்சிகளுக்கு இடையில் நாடாளுமன்ற கட்டிடத்தில் இது தொடர்பான விவாதங்கள் இடம்பெறவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மையில் இது தொடர்பில் இடம்பெற்ற சந்திப்பில் எதிர்க்கட்சிகளின்
முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர். எனினும் ஜேவிபி பங்கேற்கவில்லை.