இலங்கை பதிவுகள் தொடர்பில் ஆராயவுள்ள உலகளாவிய கால ஆய்வு செயற்குழு
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழு, நான்காவது முறையாக 2023 பெப்ரவரி 1 புதன்கிழமையன்று இலங்கையின் மனித உரிமை பதிவுகள் தொடர்பான விடயங்களை ஆராயவுள்ளது.
2023 ஜனவரி 23 ஆம் திகதி ஆரம்பமான இந்த அமர்வு, பெப்ரவரி 3 வரை இடம்பெறுகிறது.
மனித உரிமை மதிப்பாய்வு
ஏற்கனவே இந்த செயற்குழுவில் இலங்கையின் மனித உரிமை மதிப்பாய்வுகள், முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது முறையின்கீழ் 2008 மே, 2012 ஒக்டோபர், மற்றும் 2017 நவம்பர் ஆகிய வருடங்களில் இடம்பெற்றன.
இந்தநிலையில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையினால் பரிந்துரைக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட முன்னேற்ற அறிக்கை, சிறப்பு நடைமுறைகள், மனித உரிமைகள் உடன்படிக்கை அமைப்புகள் மற்றும் பிற ஐக்கிய நாடுகளின் நிறுவனங்கள் என அறியப்படும் சுயாதீன மனித உரிமை நிபுணர்கள் மற்றும் குழுக்களின் அறிக்கைகளில் உள்ள தகவல்கள் மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.
மேலும் தேசிய மனித உரிமைகள் நிறுவனங்கள், பிராந்திய அமைப்புகள் மற்றும் சிவில் சமூகக் குழுக்கள் உட்பட பிற பங்குதாரர்களால் வழங்கப்படும் தகவல்கள் என்பன இந்த கலந்துரையாடலின் போது மதிப்பாய்வு செய்யப்படவுள்ளன.
இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள பரிந்துரைகள்
பெப்ரவரி 1 ஆம் திகதி ஜெனீவாவில் முற்பகல் 9மணிக்கு நடைபெறவுள்ள இந்த நிகழ்வில்இலங்கையின் பிரதிநிதிகள் குழுவிற்கு வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தலைமை தாங்கவுள்ளார்.
அல்ஜீரியா, பெரிய பிரித்தானியா மற்றும் வடக்கு அயர்லாந்து மற்றும் கத்தார் ஆகிய நாடுகளின் பிரதிநிதிகள் இலங்கையின் மீளாய்வுக்கான அறிக்கையாளர்களாக பணியாற்றவுள்ளனர்.
இந்தநிலையில் மதிப்பாய்வுக்கான இறுதி நாளான பெப்ரவரி 3ஆம் திகதியன்று
இலங்கைக்கு அளிக்கப்பட்ட பரிந்துரைகளை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள்
பேரவையின், உலகளாவிய கால ஆய்வு செயற்குழு நிறைவேற்றவுள்ளது. அத்துடன் தமது
கருத்துக்களையும் வெளியிடவுள்ளது.

உள்ளூராட்சி தேர்தலில் விழிப்படைந்த சிறுபான்மை சமூகம் 1 மணி நேரம் முன்

மிக மோசமான அணு ஆயுதப் போராக வெடித்திருக்கும்... தடுத்து நிறுத்தினேன்: ட்ரம்ப் பேச்சால் சர்ச்சை News Lankasri

இந்தியாவால் கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் இறுதிச்சடங்கில் கவனம் ஈர்த்த நபர்... யாரிந்த அப்துல் ரவூஃப் News Lankasri
