இலங்கையில் மின்சார விநியோகத்திற்கு ஏற்பட்டுள்ள பெரும் நெருக்கடி
இலங்கையில் ஏற்பட்டுள்ள நெருக்கடியான நிலைமைக்கு மத்தியில் தொடர்ச்சியாக மின்சாரம் வழங்குவது சவாலாக உள்ளதென இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இந்த நெருக்கடி நிலை காரணமாக சில பிரதேசங்களில் சிறிது நேர மின்சார தடை ஏற்படுத்த நேரிடும் என மின்சார சபை தலைவர் எம். எம். சி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.
மின்சார சபை நெருக்கடியில் உள்ளதென்பதனை மறைக்க முடியாது. நிதி நெருக்கடி அதிகமாக உள்ளது. கொரோனா காலத்தில் சுற்றுலா ஹோட்டல் உட்பட பல முக்கிய இடங்களில் மின்சார கட்டணம் செலுத்தப்படவில்லை. இதனால் பல்வேறு செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு முடியாத அளவு நெருக்கடி நிலைமை ஏற்பட்டுள்ளது.
டொலர் தட்டுப்பாடு காரணமாக எரிபொருள் இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் ஒரு ஜெனரேட்டரையும் புனரமைக்க முடியாததாலும் மின்சார விநியோகத்தில் தடை ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபையின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான், சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல் - இந்தியா சொந்தமாக உருவாக்கும் பாதுகாப்பு அமைப்பு News Lankasri
