நாடளாவிய ரீதியில் சீரான முறையில் எரிபொருள் விநியோகம்(Photo)
முறிகண்டி பார ஊர்திகள் சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் கியூ.ஆர் நடைமுறையில் எரிபொருள் வழங்கப்பட்டு வருகிறது.
எரிபொருளை பெற்றுக்கொள்ள மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அமைதியாக பெற்று செல்கின்றனர். இருப்பில் உள்ள எரிபொருள் தீரும்வரை மக்களிற்கு எரிபொருள் வழங்கப்படும் என பார ஊர்திகள் சங்கத்தின் நிறைவேற்று முகாமையாளர் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான, முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம், இந்துபுரம் உள்ளிட்ட கிராம மக்களும், கிளிநொச்சி மாவட்டத்தின் சில கிராமங்களை சேர்ந்த மக்களும் எரிபொருளை வரிசையிலிருந்து பெற்று வருகின்றனர்.

எவ்வித குழப்பங்களுமின்றி மக்கள் எரிபொருள் பெற்று வரும் நிலையில், மாங்குளம் பொலிஸாரும் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி

அத்தியாவசிய ஊழியர்களிற்கு எரிபொருள் வழங்கும் பணி இரண்டாம் நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத்தின் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இந்த விநியோக நடவடிக்கை நேற்று ஆரம்பமானது.

இதேவேளை, இன்றையதினம் (01) குறித்த எரிபொருள் நிரப்பு
நிலையத்தில், விவசாயம்
திணைக்களம், நீர்ப்பாசன திணைக்களம்,பிரதேச சபை உத்தியோகத்தர்கள்,
உள்ளிட்ட பல திணைக்களங்களில் அத்தியாவசிய சேவையில் ஈடுபடும்
உத்தியோகத்தர்கள் பணியாளர்களிற்கும் எரிபொருள் வழங்க நடவடிக்கை
எடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 11 மணி நேரம் முன்
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
மே 1 உழைப்பாளர் தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் இரண்டு புதிய திரைப்படங்கள்.. இதோ பாருங்க Cineulagam