உண்டியல் முறையில் அதிகளவு பணம் அனுப்பப்படுகின்றது - பிரதமர் கவலை
உத்தியோகபூர்வ வழிகள் ஊடாக இலங்கைக்கு அனுப்பப்படும் பணம் அண்மைய வாரங்களில் அதிகரித்துள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
விசேட அறிக்கையொன்றை வெளியிட்ட பிரதமர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வெளிநாடுகளில் உள்ள பெரும்பாலான இலங்கையர்கள் இன்னும் உண்டியல் மற்றும் பிற முறைசாரா முறைகள் மூலம் நாட்டிற்கு நிதியை அனுப்புவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ரூபாய் மதிப்பு சரிந்ததே இதற்கு காரணம் என்று பிரதமர் கூறினார். நிலைமை சீரடையும் என எதிர்பார்ப்பதாகவும், பணம் அனுப்புவதற்கு மேலதிகமாக அதிக முதலீடுகளை ஈர்ப்பதில் நடவடிக்கை எடுப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ரூபாயின் பெறுமதி வலுவடைந்துள்ள நிலையில், அடுத்த வருடம் முதல் இலங்கையர்கள் உத்தியோகபூர்வ வழிகளில் பணம் அனுப்புவார்கள் என எதிர்பார்ப்பதாக பிரதமர் தெரிவித்தார்.

புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
என்னது மயில் கர்ப்பமா, வீட்டில் வெடித்த பெரிய பிரச்சனை... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் எபிசோட் Cineulagam
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
முதல்முறையாக அதிநவீன F-22 ராப்டர் ஸ்டெல்த் போர் விமானங்களை இஸ்ரேலில் நிலைநிறுத்தும் அமெரிக்கா News Lankasri
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri