இலங்கையர்களை தடுத்த வைத்த அவுஸ்திரேலியாவுக்கு ஐக்கிய நாடுகள் குழுவின் உத்தரவு

United Human Rights Sri Lanka Austria
By Amal Jan 10, 2025 04:10 PM GMT
Report

இலங்கை மற்றும் பிற நாடுகளைச் சேர்ந்த புகலிடக் கோரிக்கையாளர்களை தன்னிச்சையாக தடுத்து வைத்தல், நவ்ரு குடியரசில் உள்ள கடல் கடந்த தடுப்பு மையங்களுக்கு திருப்பி அனுப்புதல் அல்லது மாற்றுதல் ஆகியவற்றிற்கு அவுஸ்திரேலியா பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் குழு அறிவித்துள்ளது.

நவ்ருவில் உள்ள பிராந்திய செயலாக்க மையத்தில் நீண்டகாலமாகவும் தன்னிச்சையாகவும் தடுத்து வைக்கப்பட்ட ஏதிலிகள் மற்றும் புகலிடக் கோரிக்கையாளர்கள் சம்பந்தப்பட்ட இரண்டு வழக்குகள் குறித்த தனது முடிவுகளை, ஐக்கிய நாடுகளின் குழு இன்று வெளியிட்டுள்ளது.

முன்னதாக அவுஸ்திரேலியா 2012 மற்றும் 2013 ஆம் ஆண்டுகளில் நவ்ருவுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.

புதிய வாகனம் வாங்கவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! சந்தர்ப்பம் இதுவல்ல..

புதிய வாகனம் வாங்கவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! சந்தர்ப்பம் இதுவல்ல..

வலுக்கட்டாயமான நாடுகடத்தல்  

இதன் மூலம் அவுஸ்திரேலியா ஏதிலிகளையும், புகலிட கோரிக்கையாளர்களையும், வலுக்கட்டாயமாக பசிபிக் தீவு நாடான நவ்ருக்கு அனுப்பி வருகிறது.

இலங்கையர்களை தடுத்த வைத்த அவுஸ்திரேலியாவுக்கு ஐக்கிய நாடுகள் குழுவின் உத்தரவு | Un Rules Against Australia On Refugees

இந்தநிலையில் புகலிடக் கோரிக்கையாளர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும்போது, ஒரு அரசாங்கம், அதன் மனித உரிமைகள் பொறுப்பிலிருந்து தப்பிக்க முடியாது என்று ஐக்கிய நாடுகள் குழு உறுப்பினர் மஹ்ஜூப் எல் ஹைபா கூறியுள்ளார்.

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் முறைப்பாட்டில், ஈராக், ஈரான், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், இலங்கை மற்றும் மியான்மரைச் சேர்ந்த 24 ஆதரவற்ற சிறார்களை அவுஸ்திரேலியா கடலில் தடுத்து நிறுத்தியது.

அவர்கள் முதன் முதலில் 2013 மற்றும் 2014க்கு இடையில் இந்தியப் பெருங்கடலில் உள்ள அவுஸ்திரேலிய பிரதேசமான கிறிஸ்துமஸ் தீவுக்கு கொண்டு வரப்பட்டு 2 முதல் 12 மாதங்கள் வரை கட்டாய குடியேற்றக் காவலில் வைக்கப்பட்டனர்.

புதிய வாகனம் வாங்கவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! சந்தர்ப்பம் இதுவல்ல..

புதிய வாகனம் வாங்கவுள்ள இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு! சந்தர்ப்பம் இதுவல்ல..

தடுத்து வைப்பு 

பின்னர் அவர்கள் 2014இல் நவ்ருவுக்கு மாற்றப்பட்டு, போதுமான நீர் வழங்கல் மற்றும் சுகாதாரம், அதிக வெப்பநிலை மற்றும் போதுமான சுகாதாரப் பராமரிப்பு இல்லாத நிலையில், நெரிசலான மையத்தில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இலங்கையர்களை தடுத்த வைத்த அவுஸ்திரேலியாவுக்கு ஐக்கிய நாடுகள் குழுவின் உத்தரவு | Un Rules Against Australia On Refugees

இதன் காரணமாக தடுத்து வைக்கப்பட்ட சிறார்களில் கிட்டத்தட்ட அனைவரும் சுய-தீங்கு, மனச்சோர்வு, சிறுநீரக பிரச்சினைகள், தூக்கமின்மை, தலைவலி, நினைவாற்றல் பிரச்சினைகள் மற்றும் எடை இழப்பு உள்ளிட்ட உடல் மற்றும் மன நல்வாழ்வில் சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சிறார்களில் ஒருவரைத் தவிர மற்ற அனைவருக்கும் 2024 செப்டெம்பரில் ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்ட போதிலும், அவர்கள் நவ்ருவில் தடுத்து வைக்கப்பட்டனர்.

இரண்டாவது முறைப்பாட்டின்படி, ஈரானிய புகலிடம் கோரும் ஒருவர் 2013ஆம் ஆண்டு ஓகஸ்ட்டில், செல்லுபடியாகும் விசாக்கள் இல்லாமல் தனது கணவர் மற்றும் சிலருடன் கிறிஸ்மஸ் தீவுக்கு படகில் சென்றார்.

இலங்கையர்களை தடுத்த வைத்த அவுஸ்திரேலியாவுக்கு ஐக்கிய நாடுகள் குழுவின் உத்தரவு | Un Rules Against Australia On Refugees

இந்தநிலையில் அவர், ஏழு மாதங்களுக்குப் பிறகு, அவர் நவ்ருவுக்கு மாற்றப்பட்டு பிராந்திய மையத்தில் தடுத்து வைக்கப்பட்டார்.

அத்துடன், 2017 ஏப்ரலில் நவ்ருவில் உள்ள அதிகாரிகளால் அவர் ஒரு ஏதிலியாக அங்கீகரிக்கப்பட்டார், ஆனால் உடனடியாக விடுவிக்கப்படவில்லை.

அவருக்கு ஏதிலி அந்தஸ்து வழங்கப்பட்ட பதின்மூன்று மாதங்களுக்குப் பிறகு, சுகாதார சேவைகளுக்காக நவ்ருவில் உள்ள ஒரு ஆதரவு தங்குமிடப் பகுதிக்கு மாற்றப்பட்டார்.

பின்னர் மருத்துவ காரணங்களுக்காக அவர் 2018 நவம்பரில் அவுஸ்திரேலியாவின் பிரதான நிலப்பகுதிக்கு மாற்றப்பட்டார், ஆனால் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.  

நாளாந்தம் 5ஆயிரம் ரூபா வருமானம்! போலி விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை

நாளாந்தம் 5ஆயிரம் ரூபா வருமானம்! போலி விளம்பரம் தொடர்பில் எச்சரிக்கை

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW 
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, Stouffville, Canada

07 Mar, 2026
மரண அறிவித்தல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

02 Feb, 2026
நன்றி நவிலல்

காரைநகர், யாழ்ப்பாணம், புத்தளம், திருகோணமலை, கொழும்பு

13 Feb, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன் தெற்கு, Montreal, Canada

14 Mar, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

ஏழாலை மத்தி, ஏழாலை, Vejle, Denmark, Fredericia, Denmark

12 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, ஓமான், Oman, India, London, United Kingdom

06 Mar, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், South Croydon, United Kingdom

14 Mar, 2016
25ம் ஆண்டு நினைவஞ்சலி, 6ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, உவர்மலை

14 Mar, 2001
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Olten, Solothum, Switzerland

26 Feb, 2022
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பதுளை, புங்குடுதீவு 6ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Paris, France

28 Feb, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US