ஐ.நா.வில் இலங்கைக்கு எதிரான பிரேரணை!
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பு இன்று இடம்பெறவுள்ளது.
இலங்கையின் பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் மனித உரிமைகள் பாதுகாப்பு என்ற தலைப்பிலான குறித்த பிரேரணைக்கு அரசாங்கம் கடும் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், பிரேரணை குறித்த விவாதம் இடம்பெற்று வருகிறது. ஆறு நாடுகளினால் முன்வைக்கப்பட்டுள்ள யோசனையை இலங்கை முழுமையாக நிராகரித்துள்ளது.
சீனா, ரஷ்யா, பிலிப்பின்ஸ் மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் அந்த யோசனைக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றன. இதேவேளை இந்த யோசனைக்கு எதிராக வாக்களிக்கவுள்ளதாக பாகிஸ்தான் அறிவித்துள்ளது.
ஐ.நா மனித உரிமை பேரவை 47 உறுப்பு நாடுகளை கொண்டுள்ளது. இந்த நிலையில் இந்தியா, நேபாளம், பங்களாதேஷ் ஆகிய நாடுகளின் ஆதரவும் இலங்கைக்கு கிடைக்கும் என செய்திகள் தெரிவிக்கின்றன.
47 உறுப்பு நாடுகளைக் கொண்ட ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில், இலங்கைக்கு எதிராக வாக்களிக்க வேண்டாமென இலங்கை நட்பு நாடுகளிடம் கோரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, இந்தியா, பாகிஸ்தான், நோபாளம் மற்றும் பங்களாதேஷ் ஆகிய வலய நாடுகளின் ஒத்துழைப்பை இலங்கைக் கோரியுள்ளது.
எவ்வாறிருப்பினும் இந்த விடயம் குறித்து இந்தியா தனது நிலைப்பாட்டை அறிவிக்காத நிலையில், வாக்களிப்பில் பங்கேற்காமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரம், இலங்கைக்கு ஆதரவளிக்க சீனா தீர்மானித்துள்ளதாக ஜெனீவாவிற்கான சீனாவின் நிரந்தர வதிவிட பிரிதிநி குறிப்பிட்டுள்ளார்.
இலங்கைக்கு எதிரான பிரேரணை சாதாரண பெரும்பான்மை மூலம் வெற்றி அடையலாம் எனக் கூறப்படுகிறது, இந்நிலை இலங்கைக்கு எதிரான மனநிலையில் சர்வதேச நாடுகளிடம் மாற்றம் ஏற்பட்டுள்ளதை பார்க்க முடியும் என கூறப்படுகிறது.
உத்தேசமாக 21 நாடுகள் இலங்கைக்கு எதிராக வாக்களிப்பதில் முடிவுகள் எடுக்கப் பட்டள்ளதாக கூறும் ஜெனிவாச் செய்திகள் இவ் வாக்கெடுப்பில் இலங்கைக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரேரணைக்கு ஆதரவாக வாக்களிப்பதில் இருந்து விலகி நடுநிலை வகிக்க இந்தியா தீர்மானித்துள்ளதாக 65 வீதமான முடிவுகள் இருந்தாலும், தமிழக தேர்தல் நிலைப்பாட்டால் வாக்களிக்க முயற்சிக்கலாம் எனக் கூறப்படுகிறது.
எவை எவ்வாறு இருப்பினும் ஐரோப்பிய நேரம் 10.30 மணிக்கு வாக்களிப்பு இடம்பெற உள்ளதாகவும், ஐரோப்பிய நேரம் 10.15க்கு தமது வாக்களிப்பு தொடர்பான இறுதி முடிவு டெல்லியில் இருந்து கிடைக்கும் என ஜெனிவாவில் உள்ள பெயர் குறிப்பிட விரும்பாத இந்திய மூத்த இராஜதந்திரி தெரிவித்தார்.
