ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்: வடக்கு கடற்றொழில் பிரதிநிதி கோரிக்கை

United Nations Jaffna Sri Lanka Sri Lanka Fisherman
By Erimalai Oct 27, 2023 09:30 AM GMT
Report

வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது எம்மையும் சந்தித்து எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண கடற்றொழில் பிரதிநிதியுமான அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். வடமராட்சியில் நேற்று முன்தினம்(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடற்றொழிலாளர்களது பிரச்சினை

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய கடற்றொழில் அமைச்சர் கடந்த வாரம் உங்களை சந்தித்து இந்திய இழுவைப்படகுகளால் வடக்கு கடற்றொழில் சமூகம் பாதிக்கப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்த இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையில் ஐ.நா தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என தங்களிடம் மனு அளித்துள்ளார்.

அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால், வடக்கிலே அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகள், தடைசெய்யப்பட்ட உள்ளூர் தொழில்முறைகள் என்பவற்றால் வடக்கு மாகாண கடல்வளம் அழிக்கப்பட்டு கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரமும் நாசமாக்கப்பட்டு வருகிறது.

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்: வடக்கு கடற்றொழில் பிரதிநிதி கோரிக்கை | Un Representatives Should Also Meet Them

இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை கொண்டு உள்ளூரில் தடை செய்யப்பட்ட தொழில்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது, இவற்றை மூடிமறைக்கவே இந்திய கடற்றொழிலாளர்களது பிரச்சினையை மட்டும் பூதாகரப்படுத்தி வருகின்றனர்.

கடற்றொழில் அமைச்சர் 

நாங்கள் உங்களை சந்திக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். நீங்களும் எங்களை சந்திக்கும் நிலையும் இதுவரை இல்லை. ஆகவே ஊடகங்கள் வாயிலாக நாங்கள் உங்களிடம் இந்த விடயங்களை முன்வைக்கின்றோம். முக்கியமாக யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் சட்டவிரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்களுடைய பாரம்பரிய கடற்றொழிலாளர்களையும் எங்களது இருப்பையும் அழிக்கும் வேலையை சீனாவோடு இணைந்து கடற்றொழில் அமைச்சர் செய்து வருகின்றார்.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 2017 ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்ளூர் இழுவைமடி சட்டம் புத்தளத்தில் நடைமுறையில் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இல்லை. இதற்கு கடற்றொழில் அமைச்சும், அமைச்சருமே காரணம்.

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்: வடக்கு கடற்றொழில் பிரதிநிதி கோரிக்கை | Un Representatives Should Also Meet Them

உள்ளூரிலே தடைசெய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளை தடைசெய்து உள்ளூர் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்துங்கள்.உள்ளூரிலே கடற்றொழிலாளர்கள் நாங்கள் நெருக்கப்பட்டு நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த கடற்றொழில் திணைக்களத்தினாலும் பணிப்பாளர் நாயகத்தினாலும் கடற்றொழில் அமைச்சினாலும் ஏற்படுத்தப்பட்டு வரும் நெருகடிகளில் இருந்து எங்களை காப்பாற்றுமாறும், எங்களது கடலில் நாங்கள் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வாழ்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வகையில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநி ஆகிய நீங்கள் கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்பது வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களாகிய எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

நீங்கள் வடக்கு மாகாணத்திற்கு வரும்போது கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை நேரில் சந்தித்து கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை கட்சி சார்ந்தவர்கள் தவிர்த்து உண்மையான வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதனையும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சார்பில் தயவாக கோரிநிற்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு கடத்தல்

வெளிநாடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு கடத்தல்

உயர்ந்த வேகத்திலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

உயர்ந்த வேகத்திலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

ஆலங்குளாய், Saint Margrethen, Switzerland

31 Oct, 2025
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மட்டுவில் வடக்கு, கொக்குவில் மேற்கு

09 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US