ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்: வடக்கு கடற்றொழில் பிரதிநிதி கோரிக்கை

United Nations Jaffna Sri Lanka Sri Lanka Fisherman
By Erimalai Oct 27, 2023 09:30 AM GMT
Report

வடக்கு மாகாணத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை பிரதிநிகள் வரும்போது எம்மையும் சந்தித்து எமது கடற்றொழிலாளர்களின் பிரச்சினைகளை கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை உருவாக்கி தருமாறு வடமாகாண கடற்றொழில் பிரதிநிதியுமான அன்னலிங்கம் அன்னராசா கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். வடமராட்சியில் நேற்று முன்தினம்(25) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

இலங்கையில் 25 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

கடற்றொழிலாளர்களது பிரச்சினை

அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,

“எங்களுடைய கடற்றொழில் அமைச்சர் கடந்த வாரம் உங்களை சந்தித்து இந்திய இழுவைப்படகுகளால் வடக்கு கடற்றொழில் சமூகம் பாதிக்கப்படுகிறது. அதனை தடுத்து நிறுத்த இந்திய கடற்றொழிலாளர் பிரச்சினையில் ஐ.நா தலையிட்டு தீர்வுகாண வேண்டும் என தங்களிடம் மனு அளித்துள்ளார்.

அதனை நாங்கள் வரவேற்கின்றோம். ஆனால், வடக்கிலே அமைக்கப்படும் கடலட்டை பண்ணைகள், தடைசெய்யப்பட்ட உள்ளூர் தொழில்முறைகள் என்பவற்றால் வடக்கு மாகாண கடல்வளம் அழிக்கப்பட்டு கடற்றொழிலாளர்களது வாழ்வாதாரமும் நாசமாக்கப்பட்டு வருகிறது.

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்: வடக்கு கடற்றொழில் பிரதிநிதி கோரிக்கை | Un Representatives Should Also Meet Them

இலங்கையில் நடைமுறையில் உள்ள சட்டங்களை கொண்டு உள்ளூரில் தடை செய்யப்பட்ட தொழில்களை கட்டுப்படுத்த எவ்வித நடவடிக்கைகளையும் எடுக்காது, இவற்றை மூடிமறைக்கவே இந்திய கடற்றொழிலாளர்களது பிரச்சினையை மட்டும் பூதாகரப்படுத்தி வருகின்றனர்.

கடற்றொழில் அமைச்சர் 

நாங்கள் உங்களை சந்திக்க முடியாதவர்களாக இருக்கின்றோம். நீங்களும் எங்களை சந்திக்கும் நிலையும் இதுவரை இல்லை. ஆகவே ஊடகங்கள் வாயிலாக நாங்கள் உங்களிடம் இந்த விடயங்களை முன்வைக்கின்றோம். முக்கியமாக யாழ். மாவட்டத்தில் கடற்றொழில் அமைச்சினால் சட்டவிரோதமான செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

எங்களுடைய பாரம்பரிய கடற்றொழிலாளர்களையும் எங்களது இருப்பையும் அழிக்கும் வேலையை சீனாவோடு இணைந்து கடற்றொழில் அமைச்சர் செய்து வருகின்றார்.

நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட 2017 ஆம் ஆண்டு 11ஆம் இலக்க உள்ளூர் இழுவைமடி சட்டம் புத்தளத்தில் நடைமுறையில் இருக்கிறது. யாழ்ப்பாணத்தில் நடைமுறையில் இல்லை. இதற்கு கடற்றொழில் அமைச்சும், அமைச்சருமே காரணம்.

ஐ.நா பிரதிநிதிகள் இலங்கை வரும்போது தம்மையும் சந்திக்கவேண்டும்: வடக்கு கடற்றொழில் பிரதிநிதி கோரிக்கை | Un Representatives Should Also Meet Them

உள்ளூரிலே தடைசெய்யப்பட்ட கடற்றொழில் நடவடிக்கைகளை தடைசெய்து உள்ளூர் சட்டங்களை நடைமுறைப்படுத்துமாறு கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்துங்கள்.உள்ளூரிலே கடற்றொழிலாளர்கள் நாங்கள் நெருக்கப்பட்டு நசுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றோம்.

இந்த கடற்றொழில் திணைக்களத்தினாலும் பணிப்பாளர் நாயகத்தினாலும் கடற்றொழில் அமைச்சினாலும் ஏற்படுத்தப்பட்டு வரும் நெருகடிகளில் இருந்து எங்களை காப்பாற்றுமாறும், எங்களது கடலில் நாங்கள் சுதந்திரமாக கடற்றொழிலில் ஈடுபட்டு வாழ்வதற்கு ஒரு வழியை ஏற்படுத்தும் வகையில் இலங்கைக்கான ஐ.நா வதிவிடப் பிரதிநி ஆகிய நீங்கள் கடற்றொழில் அமைச்சரிடம் வலியுறுத்த வேண்டும் என்பது வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களாகிய எங்களது எதிர்பார்ப்பாக உள்ளது.

நீங்கள் வடக்கு மாகாணத்திற்கு வரும்போது கடற்றொழிலாளர்களது பிரச்சினைகளை நேரில் சந்தித்து கேட்டறிந்து கொள்ளும் சந்தர்ப்பத்தை கட்சி சார்ந்தவர்கள் தவிர்த்து உண்மையான வடக்கு மாகாண கடற்றொழிலாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகளுக்கும் கடற்றொழிலாளர்களுக்கும் ஏற்படுத்தித்தர வேண்டும் என்பதனையும் வடக்கு மாகாண கடற்றொழிலாளர் சார்பில் தயவாக கோரிநிற்கின்றேன்” என தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு கடத்தல்

வெளிநாடொன்றில் இருந்து பெண்கள் உட்பட 28 இலங்கையர்கள் நாடு கடத்தல்

உயர்ந்த வேகத்திலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

உயர்ந்த வேகத்திலேயே மீண்டும் வீழ்ச்சியடைந்த இலங்கை ரூபாவின் பெறுமதி

மரண அறிவித்தல்

வேலணை புளியங்கூடல், Toronto, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

28 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Vitry, France

21 Jun, 2016
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway

26 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மிருசுவில், Toronto, Canada

01 Jul, 2025
மரண அறிவித்தல்
11ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
14ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கொழும்பு, கனடா, Canada

29 Jun, 2012
நன்றி நவிலல்

நெல்லியடி, London, United Kingdom, Melbourne, Australia

30 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, North York, Canada

13 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US