எதிர்காலம் சவால் மிக்கது: ஜனாதிபதியிடம் தெரிவித்த ஐக்கிய நாடுகள்
ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மீது இலங்கை மக்கள் அதீத நம்பிக்கை கொண்டிருப்பதால் எதிர்காலம் சவால் மிக்கதாக அமையும் என ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் மார்க் அண்ட்ரூ பிரான்ஸ் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று (03.10.2024) அநுரகுமார திஸாநாயக்கவை சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
அத்துடன், புதிய ஜனாதிபதியின் தேர்தல் விஞ்ஞாபனத்தைப் பாராட்டியதுடன், அரசியல் பிரசாரத்தின் ஜனாதிபதியின் நெறிமுறைத் தன்மையையும் அவர் பாராட்டியுள்ளார்.
வறுமை ஒழிப்பு
பொதுமக்களின் எதிர்பார்ப்புகள் அதிகமாக இருப்பதால் எதிர்வரும் காலப்பகுதி சவாலானதாக இருக்கும் என்பதை வதிவிட ஒருங்கிணைப்பாளர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இலங்கையின் சர்வதேச நாணய நிதியத்திட்டத்திற்கும் அரசாங்கத்தின் வறுமை ஒழிப்பு முயற்சிகளுக்கும் ஐக்கிய நாடுகளின் ஆதரவை அவர் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |









அநுரவின் கச்சதீவு பயணமும் மகாவம்ச மனநிலை 4 நாட்கள் முன்

நீதிமன்றத்தில் குமரவேலுக்கு அரசி கொடுத்த ஷாக், என்ன நடந்தது.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 புரொமோ Cineulagam

யார் இந்த சுஷிலா கார்க்கி? நேபாளத்தில் Gen-Z போராட்டக்காரர்களால் பிரதமராக தெரிவான நபர் News Lankasri
