இலங்கை மீது நம்பிக்கை கொண்டுள்ள ஐ.நா மனித உரிமைகள் பேரவை!
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின் உள்ளடக்கம் குறித்து இலங்கை கவனம் செலுத்தும் என நம்புவதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தெரிவித்துள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்செல் பச்லெட்டின் அறிக்கையை நிராகரிப்பதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அதற்கு பதிலளிக்கும் விதமாக ஐ.நா மனித உரிமைகள் பேரவை இவ்வாறு கூறியுள்ளது.
இது குறித்து ஐ.நா. மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகரின் செய்தித் தொடர்பாளர் லிஸ் த்ரோசெல் கொழும்பு ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கையில், “ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் அலுவலகம், (OHCHR) இலங்கை அரசாங்கம் ஆணையாளர் வெளியிட்டுள்ள அறிக்கையின் பொருள் மற்றும் மிக முக்கியமான பரிந்துரைகள் குறித்து கவனம் செலுத்தும் என்று நம்புகிறது” என கூறியுள்ளார்.
இதேவேளை, இலங்கையின் மனித உரிமை நிலைமைகள் குறித்து ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் மிச்சேல் பச்லெட் அண்மையில் அறிக்கை ஒன்றினை வெளியிட்டிருந்தார்.
அதில் இலங்கையின் தமிழ்ப்பிரிவினைவாத மோதல்கள் மற்றும் போர்க்குற்றங்களில் தொடர்புபட்டிருப்பதாக குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ அதிகாரிகள் மீது சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் வலியுறுத்தியுள்ளார்.
அத்துடன், சுமார் 37 வருடங்களாக நடைபெற்ற போரின் இறுதிக்கட்டத்தில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்களுக்கான நீதியை உறுதிசெய்வதற்குத் தவறியுள்ளமை தொடர்பில் அவர் இலங்கை மீது குற்றஞ்சுமத்தியுள்ளார்.
இந்நிலையில், மனித உரிமைகள் ஆணையாளர் மிச்சேல் பச்லெட்டின் அறிக்கையை இரண்டு காரணங்களின் அடிப்படையில் நிராகரிக்க முடிவு செய்துள்ளதாக இலங்கை அரச இந்த வாரம் அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.





சீனாவிற்கு கடும் பின்னடைவு... ஜி ஜின்பிங்கின் திட்டத்தைக் கெடுத்த ட்ரம்பின் ஒற்றை முடிவு News Lankasri

வடிவேலு, பகத் பாசில் நடித்துள்ள மாரீசன் 2 நாட்களில் எவ்வளவு வசூல் செய்துள்ளது தெரியுமா, இதோ Cineulagam
