யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் யுக்திய நடவடிக்கை முன்னெடுப்பு
யாழ்ப்பாணம் (Jaffana) - சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் யுக்திய சோதனை நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த சோதனை நடவடிக்கையானது இன்று (09.05.2024) காலை இடம்பெற்றுள்ளது.
சோதனை நடவடிக்கை
இதன்போது, பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து ஏ-9 மற்றும் ஏ-32 வீதிகளூடாக பயணித்த வாகனங்களை சோதனைக்குட்படுத்தியுள்ளனர்.
அத்துடன் பொலிஸ்மா அதிபர் தேசப்பந்து தென்னக்கோனின் ஆலோசனைக்கு அமைவாக போதைப்பொருளை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடளாவிய ரீதியில் யுக்திய சுற்றிவளைப்பு நடவடிக்கை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |