உக்ரைன்-ரஷ்யா யுத்தம்-இலங்கை விமானப்படைக்கு ஏற்பட்டுள்ள சிக்கல்
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையிலான யுத்தம் காரணமாக ரஷ்ய தயாரிப்பான இலங்கை விமானப்படை பயன்படுத்தி வரும் எம்.ஐ.17 போக்குவரத்து உலங்குவானூர்திகளை பழுப்பார்ப்பதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் என்பன இடைநிறுத்தியுள்ளன.
நேட்டோ நாடுகளுக்கான ரஷ்யாவின் தடை
அத்துடன் ரஷ்யா எம்.ஐ.17 உலங்குவானுர்திகளை நேட்டோ நாடுகள் பழுதுப்பார்ப்பதற்கு தடைகளை விதித்துள்ளது.
எம்.ஐ.17 வானூர்திகளை பழுதுப்பார்த்து வந்த லித்துவேனியா
உலங்குவானூர்திகள் கடந்த 20 ஆண்டுகளாக நேட்டோ அமைப்பின் உறுப்பு நாடான லித்துவேனியாவில் பழுதுப்பார்க்கப்பட்டு வந்தன. அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை காரணமாக இலங்கை விமானப்படை பயன்படுத்தி வரும் ரஷ்யாவின் எம்.ஐ. 17 உலங்குவானூர்திகள் பழுதுப்பார்ப்பது தடைப்பட்டுள்ளது.
இதனால், இலங்கை விமானப்படையினர் பெரும் சிரமங்களுக்கு உள்ளாகி இருப்பதாக கூறப்படுகிறது.

27 ஆண்டுக்கு முன்னர் நடந்த அதிசயம் - விமான விபத்தில் நடிகரின் உயிரை காப்பாற்றிய அதே 11A இருக்கை News Lankasri

பக்தி சூப்பர் சிங்கரில் மனைவி ஆசைக்காக பாட வந்த கணவர்.. அவே ஒரு சோம்பேறி- கலாய்த்து தள்ளிய பெண் Manithan
