போரின் கொடூரத்தால் தத்தளிக்கும் உக்ரைன்! ஈபிள் டவரில் கொண்டுவரப்பட்டுள்ள மாற்றம்(Photo)
உக்ரைனில் - ரஷ்யா மூன்றாவது நாளாக தாக்குதல் நடத்தி வருகின்றது.
இதன் காரணமாக மக்கள் கடும் பீதியில் உறைந்துள்ளனர். ஏவுகணை மற்றும் குண்டுவீச்சு சத்தங்களை கேட்டு மக்கள் மிரண்டுள்ளனர்.
உக்ரைன் தலைநகர் கீவை ரஷ்யா ஏவுகளை கொண்டு தாக்கியுள்ளது.
உக்ரைன் நாட்டின் ஆட்சி அதிகாரத்தை இராணுவத்தினர் கையில் எடுத்தால் தாக்குதல் முடிவுக்கு வரும் என்று ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் அறிவித்தார்.
இதற்கிடையே, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் மற்றும் புடின் ஆகிய இருவரிடமும் உக்ரைன் நெருக்கடியை தணிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
இந்நிலையில், பிரான்ஸ் நாடு உக்ரைன் மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில் பாரிஸ் மேயர் அன் ஹிடால்கோ ஏற்பாட்டில் ஈபிள் டவரில் உக்ரைன் நாட்டு தேசியக் கொடியின் வண்ணங்களை விளக்குகளால் ஒளிரவிடப்பட்டுள்ளன. இதனால் ஈபிள் டவரில் நீலம் மற்றும் மஞ்சள் நிறங்களில் ஒளிர்கிறது.