உக்ரைன் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் வெளியான அதிரடி அறிவிப்பு
இந்த வருடம் உக்ரைனில் நடத்த திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
போர் நிறைவடையும் வரை உக்ரைனில் ஜனாதிபதி தேர்தலுக்கு வாய்ப்பு இல்லை என்று உக்ரைனிய ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
இதற்கமைய 2023 ஆண்டு வரும் ஒக்டோபர் 29 ஆம் திகதி உக்ரைனில் நடத்த திட்டமிட்டிருந்த நாடாளுமன்ற தேர்தல் மற்றும் அடுத்த ஜனாதிபதி தேர்தல் பிற்போடப்பட்டுள்ளது.
ஜெலென்ஸ்கி வெளியிட்டுள்ள கருத்து
இது தொடர்பாக அமெரிக்க பத்திரிகைக்கு ஜெலென்ஸ்கி வழங்கிய நேர்காணலில், உக்ரைனில் போர் நடைபெற்று வருகிறது இதனால் நாடு முழுவதும் இராணுவ சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் இராணுவ சட்டம் பிரகடனம் செய்யப்பட்டு இருக்கும் போது எத்தகைய தேர்தலும் நடத்தப்பட கூடாது.
There will be no presidential elections in #Ukraine until the end of the war, stated President #Zelenskyy. pic.twitter.com/adDBIcdWo8
— NEXTA (@nexta_tv) June 23, 2023
ஒருவேளை இராணுவ சட்டம் நடைமுறைப்படுத்தபடவில்லை என்றால் தேர்தல் நடத்தப்பட்டிருக்கும்.
உக்ரைனின் சட்ட விதிமுறைகளின் படி, இராணுவ சட்டம் நிறைவடைந்த 90 நாட்களுக்கு பிறகு தேர்தல் நடத்தப்படலாம் என்று நினைக்கிறேன் என ஜெலென்ஸ்கி குறிப்பிட்டுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |