ஐரோப்பாவை நோக்கி யாரும் படையெடுக்க மாட்டார்கள்! ஜெலென்ஸ்கியின் உத்தரவாதம்
ரஷ்ய போரில் தங்களது தாக்குதல் மூலம் ஐரோப்பாவிற்கு யாரும் படையெடுத்து வரமாட்டார்கள் என உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
லிதுவேனியாவில் நடந்த நேட்டோ உச்சி மாநாட்டில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி கலந்துக்கொண்டு இதனை தெரிவித்துள்ளார்.
மேலும், உக்ரைன் நேட்டோவில் இருக்குமா என்பது பற்றிய சந்தேகங்கள் அல்லது தெளிவின்மையை நாங்கள் நீக்கிவிட்டோம் என்றும் ட்வீட் செய்துள்ளார்.
உக்ரைனில், எங்கள் நிலத்தில், நமது வானில், நமது பொதுவான பாதுகாப்பிற்கான அடிப்படை ரஷ்ய அச்சுறுத்தலின் சிக்கலை தீர்க்க முடியும். இந்தப் போரில் எங்களது தாக்குதலானது, ஐரோப்பாவிற்கு மேலும் படையெடுப்பாளர்கள் வரமாட்டார்கள் என்பதற்கு உத்தரவாதம் அளிக்கின்றது.
சுதந்திரம் நிச்சயமாக நிலைத்து நிற்கும், இதுவே நமது வீரர்கள் மற்றும் நமது வீரர்களுக்கு உதவும் அனைவரும் ஒன்றாக சேர்ந்து உறுதி செய்யும் முக்கிய விடயம்' என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |