இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்யாவின் 20 ஈரானிய ட்ரோன்கள்: உக்ரைன் சரமாரி பதிலடி
உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில் தாக்குதலுக்கு களமிறக்கப்பட்டுள்ள 20 ரஷ்ய ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக உக்ரைன் தெரிவித்துள்ளது.
கடந்த வியாழக்கிழமை உக்ரைன் நகரங்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக ரஷ்யா ஏவிய 20 ஈரானிய ட்ரோன்களே இவ்வாறு உக்ரைன் விமானப்படையினால் இரவோடு இரவாக சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலின் போது மேலும் இரண்டு கலிபர் கப்பல் ஏவுகணைகள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கீவ் இராணுவ நிர்வாகம் வெளியிட்ட தகவல்
உக்ரைன் தலைநகரான கீவ் பிராந்தியம் நோக்கி முன்னெடுக்கப்பட்ட இந்த தாக்குதலில் பெரும்பாலான ட்ரோன்கள் ஈரானில் தயாரிக்கப்பட்ட dShahed ஆகும் என்றும் உக்ரைன் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, சமீபத்தில் உக்ரைன் மீது ரஷ்யா ஈரானிய ட்ரோன்கள் மூலம் நடத்திய பயங்கர வான் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டதுடன், 4 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் கீவ் இராணுவ நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |
you my like this video





ஐநாவைக் கையாள்வது எவ்வாறு..! 3 நாட்கள் முன்

சின்ன மருமகள் சீரியலில் முக்கிய நபர் மரணம்.. கதறி அழும் தமிழ் செல்வி! அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam

உக்ரைனில் பொதுமக்கள் கொல்லப்படுவதை நிறுத்துவது எப்போது? பத்திரிகையாளர் கேள்விக்கு புடினின் செய்கை News Lankasri

15 வயதில் திருமணம், கணவர் இல்ல, மகன்களை வளர்க்க இத செய்தேன்.. பாக்கியலட்சுமி செல்வி எமோஷனல் Manithan
