உக்ரைனில் இரவோடு இரவாக தாக்குதல் நடத்திய ரஷ்யா! 8 பேர் பலி - பலர் படுகாயம்
உக்ரைனின் பல்வேறு நகரங்களில் இரவோடு இரவாக ரஷ்யா நடத்திய தாக்குதலில் 8 பேர் பலியாகியுள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.
மேற்கத்திய நாடுகள் பல உக்ரைனில் ஆயுதங்களை குவித்து வரும் நிலையில் மேற்கத்திய நாடுகளின் ஆயுதங்களை கொண்டு தாக்குதல் நடத்த உக்ரைன் தயாராகி வருவதாக செய்திகள் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தன.
விபத்தில் சிக்கி 6 பேர் பலி
இந்நிலையில், நள்ளிரவு நேரத்தில், கீவ், உமன், டினிப்ரோ உட்பட பல நகரங்களில் ஏவுகணைகளை ஏவி ரஷ்யா திடீரென தாக்குதல் நடத்தியுள்ளது.
இந்த தாக்குதலில் உமனில் அடுக்குமாடி கட்டடம் ஒன்று தீப்பற்றி எரிந்துள்ளதுடன், தீ விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகியுள்ளனர்.
டினிப்ரோவில் நடத்தப்பட்ட தாக்குதலில் குழந்தையொன்றும், இளம் பெண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, தலைநகர் கீவ்-வில் நள்ளிரவு முழுவதும் வான்வழித் தாக்குதலுக்கான எச்சரிக்கை சைரன் ஒலித்தமையினால் மக்கள் அச்சமடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

செம்மணி மனித புதைகுழிக்கு நீதி கிடைக்குமா! 12 மணி நேரம் முன்

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

பாகிஸ்தானுக்கு பெரும் பின்னடைவு... செயல்பாடுகளை நிறுத்தும் பெரும் தொழில்நுட்ப நிறுவனம் News Lankasri
