ஹோர்முஸ் நீரிணை மீதான அமெரிக்க நடவடிக்கையில் பிரித்தானியா பங்கேற்காது..! அதிரடி அறிவிப்பு
ஈரானிய துறைமுகங்கள் மீதான அமெரிக்க இராணுவ முற்றுகையை நடைமுறைப்படுத்துவதில் பிரித்தானியா பங்கேற்காது என சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதன்படி, ஈரானிய துறைமுகங்களைத் தடுக்க பிரித்தானிய கடற்படைக் கப்பல்களும் வீரர்களும் பயன்படுத்தப்பட மாட்டார்கள் என்றும் ஆனால் பிரிட்டனின் கண்ணிவெடி அகற்றும் கப்பல்களும் ஆளில்லா விமான எதிர்ப்புத் திறன்களும் அப்பகுதியில் தொடர்ந்து செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹோர்முஸ் நீரிணை திறப்பு தொடர்பில் பிரித்தானியா

இந்த விடயம் தொடர்பில், பிரித்தானிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,
"உலகப் பொருளாதாரத்தையும், உள்நாட்டில் வாழ்க்கைச் செலவையும் ஆதரிப்பதற்கு அவசரமாகத் தேவைப்படும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தையும், ஹோர்முஸ் நீரிணை திறப்பதையும் நாங்கள் தொடர்ந்து ஆதரிக்கிறோம்” என குறிப்பிட்டுள்ளார்.