விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தமே பிரித்தானியா விதித்துள்ள தடை : நாமல் சாடல்
இலங்கையின் போர்வீரர்களுக்கு எதிராக பிரித்தானியா விதித்துள்ள தடை மனித உரிமைகள் பற்றியவை அல்ல, மாறாக விடுதலைப் புலிகளை ஆதரிப்பவர்களின் தொடர்ச்சியான அழுத்தத்தின் விளைவாகும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச (Namal Rajapaksa) தெரிவித்துள்ளார்.
தமது எக்ஸ் தளத்திலேயெ அவர் இந்த பதிவை வெளியிட்டுள்ளார்.
தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு...
இது நீதி அல்ல, மாறாக சில மேற்கத்திய அரசியல்வாதிகள் பணத்தின் மூலம் செல்வாக்கு செலுத்தி சலுகைகளை அனுபவித்து வருகின்றனர், இதன் மூலம் நமது தேசத்தின் நல்லிணக்கத்திற்கு ஆபத்து ஏற்படுகிறது என்று நாடாளுமன்ற உறுப்பினர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Sri Lanka was the first nation to fully defeat terrorism, yet the West continues to selectively target our war veterans while ignoring those who funded and justified LTTE brutality. The latest UK sanctions aren’t about human rights—they’re the result of relentless LTTE-backed…
— Namal Rajapaksa (@RajapaksaNamal) March 25, 2025
இன்று நாம் அனுபவிக்கும் சுதந்திரம் கடுமையான முடிவுகளின் மூலம் பெறப்பட்டது என்பதை வடக்கு மற்றும் தெற்கு மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
சமூகங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை சீர்குலைக்க யாருக்கும் ஒருபோதும் இடமளிக்கப்படாது.
மேலும், சில சர்வதேச அரசு சாரா நிறுவனங்கள் மூலம் சமூகங்களுக்கிடையில் பிளவுகளை உருவாக்குவதற்கான சலுகைகளை நாடும் சில தமிழ் அரசியல்வாதிகளின் நிகழ்ச்சி நிரலுக்கு தமிழ் சமூகம் இரையாக வேண்டாம் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

பட்டலந்த இடிமுழக்கம் மழையைத் தராது 2 நாட்கள் முன்

2030வாக்கில்... பிரித்தானியர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் செய்தி ஒன்றை தெரிவித்துள்ள ஆய்வு News Lankasri

லாபத்தில் வந்த பணம்.., ஊழியர்களுக்கு பைக்குகள், தங்க நாணயங்கள் கொடுத்து அசத்திய டிராவல்ஸ் உரிமையாளர் News Lankasri

Numerology: இந்த எண்ணில் பிறந்தவங்களுக்கு நிதி சிக்கல் வருமாம்.. மார்ச் 26 எப்படி இருக்கும்? Manithan
